Thursday 13 December 2012

இந்திய அரசே! காவேரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்து!

இந்திய அரசே! காவேரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல்படுத்து!


* தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கும் கருநாடக அரசைக் கலை!
 
* பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கு!
 
* உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கு!
 
*தமிழக மக்களே, காவிரி நீர் உரிமைக்காகப் போராடுவோம்!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு - டிசம்பர் 2012

தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி `மங்கம்மா`வுக்கு எமது அஞ்சலி!


 
 
தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி `மங்கம்மா`வுக்கு எமது அஞ்சலி!
* சாதி வெறித் தாக்குதலுக்குள்ளான நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி, மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்!
 
* சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியினரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்
என முழங்குவோம்!
 
* தமிழகத்தில் சாதிவெறியை எதிர்த்து ,அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
                    மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் -          தமிழ்நாடு      -                    டிசம்பர் 2012

Sunday 2 December 2012

தர்மபுரியில் கழகத்தின் சமதர்ம ஆர்ப்பாட்டம்

பா.ம.க.வைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா, மதியழகன், சரவணன், சின்னசாமி, சி.வி.மாது ஆகியோரின் தலைமையில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு நத்தம் காலனிக்கு சென்று கலவரத்தைத் தொடங்கினர். பின்னர் திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பிணத்தை வைத்து மறியல் செய்து வன்னிய மக்களை சாதிவெறியூட்டி மூன்று கிராமங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுவீசி தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் உள்ள டி.வி., கிரைண்டர், கட்டில் போன்ற பொருட்களை வெளியே எடுத்துவந்து கொளுத்தியுள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள் சைக்கிள்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் கடந்த ஒரு தலைமுறைக்கு மேல் சேமித்து வைத்திருந்த அனைத்து உடைமைகளும் அழிக்கப்பட்டு அம்மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் மாற்றப்பட்டுள்ளனர்.
 




சாதிக்கலவரத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது

தருமபுரி காவல் துறையினர் தெரிந்தே இந்தக் கலவரத்தை அனுமதித்துள்ளனர். குருவின் பேச்சும், நாய்க்கன்கொட்டாய் சாதியப் பஞ்சாயத்து முடிவுகளும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதாகும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நடக்க இருந்த சாதிக்கலவரத்தை தடுத்திருக்க முடியும். மேலும் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தாலும் கூட கூட்டம் கலைந்திருக்கும் அதையும் செய்யவில்லை. ஆனால் கலவரத்தை ஒரு புறம் அனுமதித்துவிட்டு, மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்தாக்குதல் நடத்திவிடாது தடுத்து நிறுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களின் உடைமை இழப்புக்கு நட்ட ஈடு தருகிறோம் என்று கூறி அவர்களை அடக்கி வைத்தனர். மேலும் கலவரத்தை தூண்டியவர்களை, திட்டமிட்டுக் கொடுத்தவர்கள் என முக்கியமானவர்களை இன்னமும் வன்கொடுமை சட்டப்படிக் கைது செய்யவே இல்லை. தற்போது நடந்த முடிந்த சம்பவங்களுக்கு கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்துகின்றனர். எனவேதான் சாதிவெறியர்களை எதிர்த்து தருமபுரியில் ம.ஜ.இ.க ஒட்டிய சுவரொட்டியை காவல்துறையினர் கிழித்தார்கள். நத்தம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யச் செல்லும்போது தடை ஏற்படுத்தி ம.ஜ.இ.க தோழர்கள் 20 பேரை கைது செய்தனர். இந்தக் கலவரம் பற்றி ஆய்வு செய்த அனைத்துக் குழுக்களின் அறிக்கையும் இது ஒரு திட்டமிட்டச் சாதிக் கலவரம்தான் என்று கூறுவதோடு காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
 



பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள ஆதிக்க சக்திகளே சாதிக்கலவரத்திற்குக் காரணம்
1947 அரசியல் அதிகார மாற்றத்திற்குப் பிறகு இநதிய அரசு நிலப்பிரப்புத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டே அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று தரகு முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையிலேயே பயணம் செய்கிறது. நிலச்சீர்திருத்தத்தின் மூலம் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப்படுவதற்கு பதிலாக நேரடி குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மேல்தட்டுப் பிரிவினருக்கே நிலம் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்படவே இல்லை. பசுமைப் புரட்சித் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் புதிய நிலப்பிரபுத்துவ மற்றும் பணக்கார விவசாய வர்க்கம் ஒன்று உருவாகி உள்ளது. அந்த வர்க்கம் குத்தகை, வட்டி, வாரம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு கிராமப்புற ஆளும் வர்க்கங்களாக உருவெடுத்துள்ளது. அது பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலேயே கடுமையான வர்க்க முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன. அந்த ஆளும் வர்க்கங்கள் மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடுகின்றன. தமது சாதியிலேயே அதிகரித்துவரும் வர்க்க முரண்பாடுகளை மூடிமறைக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டுவதன் மூலமும் ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்குகின்றனர். அந்த நோக்கத்திற்காகத்தான் சாதிக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
 



சாதிக்கலவரம் பரவும் அபாயம்!

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகும் கூட பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்கள் அடுத்தடுத்த சாதிக்கலவரங்களுக்கு தயார் செய்கின்றனர். இந்தக் கலவரம் முடிவு அல்ல ஆரம்பம்தான் என்று சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் அணிதிரள முயற்சி எடுக்கின்றனர்.கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் மணிகண்டன் கூறும்போது “வன்கொடுமை, கலப்புத் திருமணம், நில உரிமை மீட்பு என்றெல்லாம் சொல்லி பெரும்பாலான மக்கள் மீது அநீதி இழைக்கப்படுகிறது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலாளராக இருந்தவர் கோவை செழியன். அவரே தனது இறுதி காலத்தில் திராவிடம்தான் மக்களை சீரழிக்கிறது என்று உணர்ந்து தலித் அல்லாதோர் பேரவையை உருவாக்கினார். எனவே இப்போது தலித்துகளை கார்னர் செய்வதற்கல்ல... தலித் அல்லாதவர்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம். காடுவெட்டி குரு உள்ளிட்ட மற்ற சமுதாயத் தலைவர்களோடு பேசியுள்ளோம். விரைவில் இந்தியா முழுதும் உள்ள தலித் அல்லாத சாதித்தலைவர்களை கூட்டி மாநாடு நடத்துவோம்” என்று சாதிவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். தருமபுரி கலவரத்திற்கு காரணம் பா.ம.க அல்ல என்றும், தலித்துக்களால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து நடத்தியது என்று ராமதாசு கூறியதற்கு பலன் உடனே கிடைத்துவிட்டது. இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உயர்சாதி ஆதிக்க சக்திகள் பெரும் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகின்றன.
 



சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கு புதிய வழி
தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புகள் மற்றும் பல்வேறு உண்மை அறியும் குழுக்கள் அனைத்தும் சாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த உண்மை குற்றாவாளிகளை கைது செய்வது, சட்டங்களை கடுமையாக்குவது, தனிப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் நட்ட ஈடும் கேட்பது போன்ற கோரிக்கைகளையே முன்வைக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டங்களும், சிறப்புத் திட்டங்களும் சாதி, தீண்டாமையை ஒழிக்கபோவதில்லை. சாதிக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதுமில்லை.
 சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக இருப்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், அரசியல் மற்றும் பண்பாடுமேயாகும். அதாவது அகமணமுறை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலைமுறை, பரம்பரைச் சடங்குகள், தீண்டாமை, தீண்டாதவருக்கு பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பேயாகும். இவை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானமே யாகும். இவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதே அதற்குத் தீர்வாகும். இந்திய அரசு தரகுமுதலாளித்துவ, நிலப்பிரத்துவ ஆளும் வர்க்கங்களை பாதுகாக்கின்ற அரசாகும். எனவே இந்திய அரசை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தூக்கியெறிவது ஒன்றுதான் சாதி, தீண்டாமைக்கும் சாதிக் கலவரங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும்.
பிரசுரிப்பு Admin

Thursday 22 November 2012

தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவோம்!

தருமபுரியில்... சாதிவெறியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவோம்!

தருமபுரி அருகே செல்லன் கொட்டாய் வன்னிய சாதியைச் சேர்ந்த இளம்பெண் திவ்யாவும், நத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் என்பவரும் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டார்கள். அதை எதிர்த்து பா.ம.க.வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ஒரு கொடிய சாதி வெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இனிமேல் யாரும் காதலித்து கலப்புத் திருமணம் புரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்த சாதிக் கலவரம்.

திட்டமிட்ட சாதிக்கலவரம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திவ்யாவும் இளவரசனும் காதலித்து வந்துள்ளனர். அதை திவ்யாவின் பெற்றோர் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளனர். திவ்யாவின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் வேறு மாப்பிள்ளைக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். எனவே திவ்யா அக்டோபர் 8ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, இளவரசனுடன் அக்டோபர் 15ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிவெறியர்கள் திவ்யாவின் பெற்றோரை நிர்ப்பந்தம் செய்து காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மணமக்கள் இருவரும் டி.ஐ.ஜி சஞ்சய் குமார், தருமபுரி டி.எஸ்.பி அஷ்ரா கர்க் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களும் இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறினர்.
எந்த ஒரு ஆணும், பெண்ணும் தமக்கான துணையை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொள்வது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமையுமாகும்.

ஆனால் வன்னிய சாதியைச் சார்ந்த முக்கியஸ்த்தர்களும், பா.ம.க.வைச் சேர்ந்தத் தலைவர்களும் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அழைத்துவருமாறு தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்துவந்தனர். தந்தையின் வேண்டுகோளை திவ்யா நிராகரித்தார். அதன் பின்பு நவம்பர் 4ஆம் தேதி பா.ம.கவின் தர்மபுரி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மதியழகன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் நாய்க்கன் கொட்டாயில் சாதிய பஞ்சாயத்தைக் கூட்டினர். நவம்பர் 7க்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் திவ்யாவை ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இவை அனைத்தும் காவல்துறையினருக்குத் தெரியும்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்கோ, சாதிப் பஞ்சாயத்தின் மிரட்டலுக்கோ திவ்யா பணியவில்லை. பிரிந்து வந்தால் தம்மை கொன்று விடுவீர்கள் என்று கூறி இளவரசனுடனேயே வாழ்வேன் என்று கூறிவிட்டார். இதன் காரணமாக அவரின் தந்தை நாகராஜ் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சாவில் மர்மம் உள்ளது. அவரின் உறவினர்கள் விஷம் கொடுத்து கொன்றனர் என்ற ஒரு செய்தியும் நிலவுகிறது. அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு விசாரணையை ஒழுங்காகச் செய்தால்தான் அதன் உண்மை புரியும்.

பா.ம.க.வைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா, மதியழகன், சரவணன், சின்னசாமி, சி.வி.மாது ஆகியோரின் தலைமையில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு நத்தம் காலனிக்கு சென்று கலவரத்தைத் தொடங்கினர். பின்னர் திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பிணத்தை வைத்து மறியல் செய்து வன்னிய மக்களை சாதிவெறியூட்டி மூன்று கிராமங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுவீசி தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் உள்ள டி.வி., கிரைண்டர், கட்டில் போன்ற பொருட்களை வெளியே எடுத்துவந்து கொளுத்தியுள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள் சைக்கிள்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் கடந்த ஒரு தலைமுறைக்கு மேல் சேமித்து வைத்திருந்த அனைத்து உடைமைகளும் அழிக்கப்பட்டு அம்மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் மாற்றப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த சாதிக்கலவரம் நாகராசனின் தற்கொலைக் காரணமாக உணர்ச்சி வசத்தால் ஏற்பட்ட சம்பவம் அன்று. மாறாக அது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். அதற்கு இந்த கலப்புத் திருமணம் மட்டுமே காரணம் அல்ல. மாறாக பா.ம.கட்சி இழந்துவிட்ட தமது அரசியல் செல்வாக்கை மீட்பதற்காக சாதிவெறியைத் தூண்டி வன்னிய ஓட்டுவங்கியை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஒருபகுதியேயாகும். சென்ற மேமாதம் மகாபலிபுரத்தில் பா.ம.க.வால் நடத்தப்பட்ட சித்ராபவுர்ணமி விழா மேடையிலும், கடந்த செப்டம்பர் மாதம் அரியகுளத்தில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்திலும் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வன்னிய இனப் பெண்களை காதலித்து திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா என்று பகிரங்கமாக அழைப்புவிடுத்தார். அதன் தொடர்ச்சிதான் தற்போதைய கலவரம். இந்தக் கலவரத்தில் தொழில் முறையில் கொள்ளையடிக்கவும், கொலை செய்யவும் பயிற்சி பெற்ற ரவுடிகள் 300 பேரை வெளியிலிருந்து கொண்டுவந்து ஈடுபடுத்தியுள்ளனர்.
எனவே இது திட்டமிட்ட சாதிக்கலவரமேயாகும்.

சாதிக்கலவரத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது

தருமபுரி காவல் துறையினர் தெரிந்தே இந்தக் கலவரத்தை அனுமதித்துள்ளனர். குருவின் பேச்சும், நாய்க்கன்கொட்டாய் சாதியப் பஞ்சாயத்து முடிவுகளும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதாகும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நடக்க இருந்த சாதிக்கலவரத்தை தடுத்திருக்க முடியும். மேலும் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தாலும் கூட கூட்டம் கலைந்திருக்கும் அதையும் செய்யவில்லை. ஆனால் கலவரத்தை ஒரு புறம் அனுமதித்துவிட்டு, மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்தாக்குதல் நடத்திவிடாது தடுத்து நிறுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களின் உடைமை இழப்புக்கு நட்ட ஈடு தருகிறோம் என்று கூறி அவர்களை அடக்கி வைத்தனர். மேலும் கலவரத்தை தூண்டியவர்களை, திட்டமிட்டுக் கொடுத்தவர்கள் என முக்கியமானவர்களை இன்னமும் வன்கொடுமை சட்டப்படிக் கைது செய்யவே இல்லை. தற்போது நடந்த முடிந்த சம்பவங்களுக்கு கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்துகின்றனர். எனவேதான் சாதிவெறியர்களை எதிர்த்து தருமபுரியில் ம.ஜ.இ.க ஒட்டிய சுவரொட்டியை காவல்துறையினர் கிழித்தார்கள். நத்தம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யச் செல்லும்போது தடை ஏற்படுத்தி ம.ஜ.இ.க தோழர்கள் 20 பேரை கைது செய்தனர். இந்தக் கலவரம் பற்றி ஆய்வு செய்த அனைத்துக் குழுக்களின் அறிக்கையும் இது ஒரு திட்டமிட்டச் சாதிக் கலவரம்தான் என்று கூறுவதோடு காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
உண்மையில் இச்சாதிக் கலவரத்திற்கான முழு பொறுப்பையும் தமிழக முதல்வரும், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுமே ஏற்கவேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ இந்துமதவாத பிற்போக்கிலும், வர்ணாசிரம தர்மத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அத்துடன் முக்குலத்தோர், கொங்கு வேளாளர், வன்னியர் போன்ற தமிழகத்தின் பெரும் எண்ணிக்கை கொண்ட சாதிகளை தம்வசப்படுத்தி ஓட்டுவங்கியாக பயன்படுத்துவதில் திறமையானவர். மேலும் தமிழகத்தின் காவல்துறை உயரதிகாரிகளில் பலர் உயர்சாதி வெறிபிடித்தவர்களாகவும் உள்ளனர். பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சென்ற ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு அதற்கு நல்லதொரு உதாரணமாகும். இத்தகைய நிலைமைகள்தான் சாதிக்கலவரங்கள் நடத்துவதற்கு சாதிவெறிச் சக்திகளுக்கு ஊக்கமளிக்கின்றன.

தருமபுரியில் தற்போது நடந்தது போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்முறை இன்று தமிழகத்திலும் - நாடுமுழுவதிலும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. தாழ்த்தப்பட்டச் சாதியை சார்ந்த மாயாவதி முதலமைச்சராக இருந்தபோதும் உ.பி.யில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த முடியவில்லையே ஏன்? இதை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி?

பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள ஆதிக்கச் சக்திகளே சாதிக்கலவரத்திற்குக் காரணம்

1947 அரசியல் அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்திய அரசு நிலப்பிரப்புத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டே அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று தரகு முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையிலேயே பயணம் செய்கிறது. நிலச்சீர்திருத்தத்தின் மூலம் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப்படுவதற்கு பதிலாக நேரடி குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மேல்தட்டுப் பிரிவினருக்கே நிலம் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்படவே இல்லை. பசுமைப் புரட்சித் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் புதிய நிலப்பிரபுத்துவ மற்றும் பணக்கார விவசாய வர்க்கம் ஒன்று உருவாகி உள்ளது. அந்த வர்க்கம் குத்தகை, வட்டி, வாரம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு கிராமப்புற ஆளும் வர்க்கங்களாக உருவெடுத்துள்ளது. அது பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலேயே கடுமையான வர்க்க முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன. அந்த ஆளும் வர்க்கங்கள் மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடுகின்றன. தமது சாதியிலேயே அதிகரித்துவரும் வர்க்க முரண்பாடுகளை மூடிமறைக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டுவதன் மூலமும் ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்குகின்றனர். அந்த நோக்கத்திற்காகத்தான் சாதிக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசு செயற்படுத்திவரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் இன்று நாட்டை நாசமாக்கி ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கிராமப்புற விவசாயம் அழிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறு நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினர் கிராமத்தை விட்டு நகர்ப்புறம் நோக்கி விரட்டப்பட்டுள்ளனர். அத்துடன் மத்திய மாநில அரசுகள் முதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதால் பஸ்கட்டணம், பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, விவசாயத்திற்கான மானியத்தை வெட்டுதல், கல்வி கடைச்சரக்காக மாற்றப்படுதல் மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. மக்கள் வாழவே முடியாத ஒரு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகளில் அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து எங்கே ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு தயாராகிவிடுவார்களோ என்று ஆளும் வர்க்கங்களும், சாதி ஆதிக்க சக்திகளும் அஞ்சுகின்றன. எனவே சாதிக்கலவரங்களைத் தூண்டி வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றனர். இது ஆட்சியாளர்களுக்கும் அவசியமானதுதான். எனவேதான் சாதிவெறி சக்திகளை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்காமல் கலவரத்திற்கு துணைபோகின்றனர்.

‘குடிதாங்கியின்’ அவலநிலை

காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் குறித்து ராமதாசு பேசும்போது “நான் காதலை எதிர்க்கவில்லை” என்றும், “ஏதுமறியா பெண்களைத் திட்டமிட்டுக் கடத்தி, பலாத்காரப்படுத்தி, கல்யாணம் செய்வது, பேரம்பேசி பணம் பறிப்பது என்பதை விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த சிலர் ஒரு செயலாகவே செய்துவருகின்றனர். இதனால் வன்னியப் பெண்களின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது. இந்த நாடகக் காதலை ஏற்க முடியாது” என்றும் அவர் கூறுகிறார். இராமதாசு, தூய்மையான காதல்பற்றிப் பேசி கலப்புத் திருமணங்களை மட்டும் எதிர்க்கவில்லை. தங்களது சாதிக்குள்ளேயே ஏழை, பணக்காரர்களுக்கு இடையே வளர்ந்துவரும் காதலையும் எதிர்க்கிறார். உண்மையில் சாதிக்குள் பெற்றோர்களால் செய்யப்படும் ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களுக்கு தூக்கு கயிராகவே மாறியுள்ளது. வரதட்சணை கேட்டுக் கொடுக்க முடியாததால் எத்தனை பெண்களின் உயிர் பறிபோகிறது. பெண்களை பணம் காய்க்கும் மரமாக மாற்றும் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் வன்னிய சாதிப் பெண்களுக்கும் தூக்குக் கயிறாக மாறியுள்ளது. காதல் மறுப்பு மூலம் இந்த சாதிய உள்முரண்பாடுகளை மூடிமறைக்கிறார் இராமதாசு.

ஒருங்கிணைந்த வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில அமைப்பின் தலைவர் மணிகண்டன் காதல் மணம், கலப்பு மணத்தை எதிர்த்துப் பேசும்போது, “கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும் மரியாதையும் கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனால் காதல் மற்றும் கலப்புத் திருமணத்தில் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கு அழிஞ்சுபோகுது. இந்தச் சீரழிவை தடுத்து நிறுத்தியே ஆகனும்” என்று கூறுகிறார்.

உண்மையில் நிலப்பிரபுத்துவ சாதியப் பண்பாட்டின் பாரம்பரியப் பண்பாடு என்பது மிகவும் கேவலமானது. மடங்கள், கோவில்கள், மாடவீதிகளில் தேவதாசியை உருவாக்கியது என்ன பாரம்பரியம்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது வன்புணர்ச்சியில் ஈடுபட்டு படுகொலைகள் புரிந்தது எந்தப் பண்பாடு? விதவைகளுக்கு மறுமணத்தை மறுத்து அவர்களை காமக்கிழத்திகளாக மாற்றிக்கொள்ளும் சாதியப் பண்பாடு என்ன புனிதமானது? இன்றும் கோவில்களும் மடங்களும் காமவெறிக் கூடாரங்களாக மாறி நிலப்பிரபுத்துவ பண்பாடு நாற்றமெடுக்கிறதே இதுதான் இவர்கள் சொல்லும் பண்பாடு! பாரம்பரியம், பண்பாடு என்று கூறிக்கொண்டு காதலையும், கலப்பு மணங்களையும் மறுக்கும் இந்தக் காட்டுமிராண்டிகளை வளரும் தலைமுறை ஏற்கப் போவதில்லை. வளர்ந்துவரும் பொருளாதார நிலைமைகள், நகர்மயமாதல், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தும் காதலையும், கலப்புத் திருமணத்தையும் வளர்த்துக்கொண்டே செல்லும். இந்தச் சாதி வெறிச் சண்டாளர்களின் கனவு நொறுங்கும்.

சாதிக்கலவரம் பரவும் அபாயம்!

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகும் கூட பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்கள் அடுத்தடுத்த சாதிக்கலவரங்களுக்கு தயார் செய்கின்றனர். இந்தக் கலவரம் முடிவு அல்ல ஆரம்பம்தான் என்று சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் அணிதிரள முயற்சி எடுக்கின்றனர்.
கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் மணிகண்டன் கூறும்போது “வன்கொடுமை, கலப்புத் திருமணம், நில உரிமை மீட்பு என்றெல்லாம் சொல்லி பெரும்பாலான மக்கள் மீது அநீதி இழைக்கப்படுகிறது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலாளராக இருந்தவர் கோவை செழியன். அவரே தனது இறுதி காலத்தில் திராவிடம்தான் மக்களை சீரழிக்கிறது என்று உணர்ந்து தலித் அல்லாதோர் பேரவையை உருவாக்கினார். எனவே இப்போது தலித்துகளை கார்னர் செய்வதற்கல்ல... தலித் அல்லாதவர்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம். காடுவெட்டி குரு உள்ளிட்ட மற்ற சமுதாயத் தலைவர்களோடு பேசியுள்ளோம். விரைவில் இந்தியா முழுதும் உள்ள தலித் அல்லாத சாதித்தலைவர்களை கூட்டி மாநாடு நடத்துவோம்” என்று சாதிவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். தருமபுரி கலவரத்திற்கு காரணம் பா.ம.க அல்ல என்றும், தலித்துக்களால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து நடத்தியது என்று ராமதாசு கூறியதற்கு பலன் உடனே கிடைத்துவிட்டது. இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உயர்சாதி ஆதிக்க சக்திகள் பெரும் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகின்றன.

அதற்கு பதிலளித்து பேசும்போது விடுதலை தமிழ் புலிகள் அமைப்பைச் சார்ந்த தலித் தலைவர் குடந்தை அரசன் இவ்வாறு கூறுகிறார்:

“தலித்துக்கள் சார்பாக சட்டம் இருக்கிறது என்பவர்களைக் கேட்கிறேன்... தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனைபேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசுதவறிவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு ஜாமீன் கிடையாது.ஆனால் இந்தச்சட்டம் தற்போது நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் இதுபோல் துணிந்து தலித்துக்கள் மீதான வன்முறைகளை அவர்களால் அரங்கேற்ற முடிகிறது” இவ்வாறு சாதிவெறியர்களுக்கு சரியான பதிலளிக்கும் இவர் அவர்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட இயக்கங்களை தனியாகக் கூட்டணி சேர்ப்பது பற்றிப் பேசுகிறார்.

“எனவே அண்ணன் திருமாவளவன், டாக்டர். கிருஷ்ணசாமி, சகோதரர் ஜான்பாண்டியன், செ.கு.தமிழரசன், ஜெகன்மூர்த்தி உள்ளிட்டத் தலைவர்களை ஒன்றிணைத்து தலித்துக்கள் மீது தொடுக்கப்படும் இந்தப்போரை எதிர்கொள்ள வேண்டும். இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை நாங்கள் செய்வோம். அகில இந்திய அளவில் ராம்விலாஸ் பாஸ்வான்,மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் ஒருங்கிணைப்பையும் இதற்காக செய்வோம். வரலாறு மீண்டும் கற்காலத்தை நோக்கி திரும்பிட அறிவாளர்கள் அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிணைவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக போராடி ஒருபோதும் உயர் சாதி ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியாது. அனைத்து சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களோடு ஒன்றிணைந்து போராடுவது மூலம் மாட்டுமே சாதிய தீண்டாமையையும், சாதிக் கலவரங்களையும் ஒழிக்கமுடியும்.

திருமாவளவன் அவர்கள் பாலன் வழிதான் எங்கள் வழி என்று பேசுகிறார். வரவேற்கிறோம். அப்படி எனில் சேரி என்றால் சிறுத்தை என்ற நிலைப்பாட்டைக் கைவிடவேண்டும். சாதியம் நிலவுவதற்கான நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் திட்டத்தை ஏற்கவேண்டும். அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர இயக்கங்களோடு இணைந்து பணியாற்ற முன்முயற்சி எடுக்கவேண்டும்.

சாதியத் தீண்டாமை ஒழிப்பு, சாதிக்கலவரத்தை தடுத்த நிறுத்துவது பற்றிய பிரச்சினையில் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற மாநில அளவிலான தரகுமுதலாளித்துவக் கட்சிகளும் ஆதிக்க சாதிகளின் பக்கமே நிற்கின்றன. சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அம்பேத்கரும் பெரியாரும் எவ்வளவு போராட்டம் நடத்தியிருப்பினும், அவர்களின் வழி எந்நாளும் சாதி தீண்டாமையை ஒழிக்கப் பயன்படாது. இக்கொள்கைகளையுடைய நாடாளுமன்றவாத தேர்தல் சந்தர்ப்பவாத நிலைபாட்டிலிருந்து இக்கட்சிகள் ஒரு போதும் ஜனநாயகப் பாத்திரத்தை ஆற்றமாட்டா. இக்கட்சிகள் தனித் தொகுதி தவிர பிற தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தவே தயாரில்லை. இவை எங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தை பெற்றுத்தரப் போகிறது.
இடது, வலது திருத்தல்வாதக் கட்சிகள் குறிப்பாக சி.பி.எம் தலைமையில் இயங்கும் சாதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதி தீண்டாமையை எதிர்த்தும், சாதியக் கலவரத்தை எதிர்த்தும் பயனுள்ள பணிகளை செய்துவருகிறது. அனைத்து சாதி உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. இவை அனைத்தும் சரியானதும் அவசியமானதுமாகும். எனினும் அக்கட்சிகள் கடைப்பிடித்து வரும் சமரசவாதப் பாதை - ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பில் அது கொண்டுள்ள சமரசப் பாதையோடு அம்பேத்கர், பெரியாரின் சமூக சீர்திருத்தவாதத்தை ஒன்றிணைக்கின்ற சமரசப் பாதை - சாதித் தீண்டாமையை ஒழிப்பதற்கு பயன்படாது.

நாய்க்கன் கொட்டாய் பகுதியில் பாலன் தலைமையிலான நக்சல்பாரி இயக்கம் - அதன் தொடர்ச்சியாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பலமாக இருந்தவரை சாதிவெறியர்கள் தலையெடுக்க முடியாமல் அடங்கிக் கிடந்தனர். ஆனால் தன்னை பாலனின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் கலைப்புவாதியும், பிழைப்புவாதிகளும் இயக்கத்தை சீரழித்து பிளவு படுத்தியதால் இயக்கம் பலவீனமடைந்தது. அத்துடன் இந்த சக்திகள் சாதிவெறியர்களுக்குத் துணைபோகும் துரோகத்தையும் செய்கின்றன. ஏற்கெனவே வெள்ளாளப்பட்டிப் பிரச்சினையில் வன்னியர் பக்கம் நின்று செயல்பட்டார்கள். இன்று இந்தக் கலவரம் தன்னியல்பாக நடந்தது, இரண்டு சாதியினர்தான் பொறுப்பு என்று கூறி உயர்சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு துணைபோவதுடன் மறுபுறம் சாதிக் கலவர எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பது போல ஏமாற்ற நினைக்கின்றனர். இந்தத் துரோகத்தைப் புரிந்துகொண்டு, புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்னிலும் பலமாக செயலாற்றுவதை தடுத்துவிட முடியாது.

சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கு புதிய வழி

தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புகள் மற்றும் பல்வேறு உண்மை அறியும் குழுக்கள் அனைத்தும் சாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த உண்மை குற்றாவாளிகளை கைது செய்வது, சட்டங்களை கடுமையாக்குவது, தனிப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் நட்ட ஈடும் கேட்பது போன்ற கோரிக்கைகளையே முன்வைக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டங்களும், சிறப்புத் திட்டங்களும் சாதி, தீண்டாமையை ஒழிக்கபோவதில்லை. சாதிக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதுமில்லை.

சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக இருப்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், அரசியல் மற்றும் பண்பாடுமேயாகும். அதாவது அகமணமுறை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலைமுறை, பரம்பரைச் சடங்குகள், தீண்டாமை, தீண்டாதவருக்கு பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பேயாகும். இவை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானமேயாகும். இவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதே அதற்குத் தீர்வாகும். இந்திய அரசு தரகுமுதலாளித்துவ, நிலப்பிரத்துவ ஆளும் வர்க்கங்களை பாதுகாக்கின்ற அரசாகும். எனவே இந்திய அரசை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தூக்கியெறிவது ஒன்றுதான் சாதி, தீண்டாமைக்கும் சாதிக் கலவரங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும்.

எனவே உடனடியாக சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக, சாதிக் கலவரங்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்!

* காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் ஜனநாயக உரிமை!

* தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய பா.ம.க வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடு!

* தாழ்த்தப்பட்டோர் மீது சாதி வெறியர்கள் தொடுக்கும் வன்கொடுமைகளை
முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!

* நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் சாதியத்தையும் ஒழிக்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
நவம்பர் 2012

Sunday 7 October 2012

கூடங்குளம் அணு உலையைத் திற!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

 அணுசக்தி ஆபத்து என்று பீதியூட்டி கூடங்குளம் அணு உலையை எப்படியாவது இழுத்து மூடிவிடவேண்டும் என்று அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். அக்டோபர் 29ல் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் மிரட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, அவர்களின் மாற்று வாழ்வாதாரப் பிரச்சனைகளை முறையாகத் தீர்த்துவைக்க இன்று வரை முழுமையாக முயற்சி செய்யவில்லை. இத்தகைய ஒரு சூழலில், நாட்டில் நிலவும் மின்வெட்டு, மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்துடன் அணு உலையைத் திறக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அணு உலையைப் பற்றிய பீதி

 அணு உலை எதிர்ப்பாளர்கள் புகுசிமாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவைக் காட்டி அணு உலை விபத்து, கதிர்வீச்சு ஆபத்து, அணுக்கழிவுகளின் அபாயம் என்று பீதியூட்டி, அச்சுறுத்தி கூடங்குளம் அணு உலையை மூடியே ஆக வேண்டும் என்கின்றனர். புகுசிமாவில் அணு உலை உருகி கதிர்வீச்சு தாக்கியதற்குக் காரணம் அணுத் தொழில் நுட்பம் அல்ல என்பதையும், தனியார் நிறுவனங்களின் இலாப வெறியின் காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகப் பின்பற்றாததே காரணம் என்பதையும் ஜப்பான் அரசாங்கத்தின் ஆய்வறிக்கை தெளிவாக்கிவிட்டது. மேலும் அணுகதிர்வீச்சு பற்றிய அணு சக்தி எதிர்ப்பாளர்களின் பிரச்சாரம் வெறும் பீதி என்பதும் அம்பலமாகிவிட்டது. புகுசிமாவில் யாரும் கதிர்வீச்சால் இறக்கவில்லை. புகுசிமா விபத்தைத் தொடர்ந்து டோக்கியோவில் கதிர்வீச்சின் தாக்கமானது உடலில் ஓராண்டில் பொட்டாசியம் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் தாக்கத்தில் (390 மைக்ரோ சீவெர்ட்ஸ்), பத்தில் ஒரு பங்குதான் நிலவியது (40 மைக்ரோ சீவெர்ட்ஸ்). அணு உலையின் 50 மைல் சுற்றளவில் வசிப்பவர்களின் மீது ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதில் வெளிப்படும் கதிர்வீச்சின் தாக்கம் (0.1 மைக்ரோ சீவெர்ட்ஸ்) அளவுக்குக் குறைந்ததுதான். அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் விபத்தின்போது கதிர்வீச்சின் தாக்கம் இயற்கையிலும் மருத்துவத் துறை மூலமும் ஒரு மனிதன் பெறுகின்ற (4000 மைக்ரோ சீவெர்ட்ஸ்) அளவில் நான்கில் ஒரு பகுதிதான் இருந்தது. செர்னோபிலில் நடந்த கொடிய கதிர்வீச்சுப் பாதிப்புகளுக்குப் பிறகு அணுக் கதிர்வீச்சுப் பாதுகாப்பில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு உலையே, “கதிர்வீச்சு அபாயம் என்பது பீதி” என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறது. எனவே அணுக்கதிர்வீச்சு ஆபத்து என்பது பீதியூட்டுவதேயாகும்.


 அணு உலைகளை மூடவேண்டும் என்பதற்கு அவர்கள் கூறுகின்ற மற்றொரு காரணம் புகுசிமாவிற்குப் பிறகு உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவருகிறார்கள் என்பது. இது ஒரு வடிக்கட்டிய பொய்யாகும். இன்று உலகில் 65 நாடுகள் அணு உலைகளை நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன. புகுசிமாவிற்குப் பிறகும் அமெரிக்கா தனது 104 அணு உலைகளில் ஒன்றைக்கூட மூடவில்லை. பிரான்ஸ் 74 சதவீதம், பெல்ஜியம் 57சதவீதம், ஸ்வீடன் 40 சதவீதம், ஸ்விட்சர்லாந்து 41 சதவீதம் அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. புகுசிமாவிற்குப் பிறகு ரசியா 20 சதவீதம் புதியதாக அணுசக்தி மின்சாரத்தையும், சீனா 51 புதிய அணு உலைகளையும், தென்கொரியா 20 அணு உலைகளையும், வியட்நாம் 5 உலைகளையும் கட்டிவருகின்றன.

அணு சக்தித் துறையின் நெருக்கடி

 அணு உலைகளைத் திறப்பதற்குப் பல நாடுகள் விரும்பினாலும், பொதுவாக அணு சக்தித் துறை உலகம் முழுவதும் இறங்குமுகத்திலேயே உள்ளது. புகுசிமாவிற்கு முன்பே அணு சக்தித் துறை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அணு சக்தித்துறையின் வரலாற்றிலேயே 2008ஆம் ஆண்டில்தான் உலகில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லை. 2009 முதல் 2011 வரை 9 அணு உலைகள் கட்டப்பட்டன. அதே சமயம் பழைய 11 அணு உலைகள் மூடப்பட்டுவிட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 1989இல் 177 அணு உலைகள் இயங்கின. அது 2011ல் 143ஆகக் குறைந்துவிட்டன. 2010ல் அணு சக்தித் துறை மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை விட (375 ஜிகா வாட்ஸ்) பிற சூரிய ஒளி, காற்றாலைகள், உயிரியல் மற்றும் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்துவிட்டது (381 ஜிகா வாட்ஸ்).
 மேற்கண்டவாறு அணு சக்தித்துறை வீழ்ச்சியைச் சந்தித்துவரக் காரணம் அணுத் தொழில்நுட்பம் அல்ல என்றும், இன்று அந்நாடுகள் சந்தித்துக்கொண்டிருக்கிற முதலாளித்துவப் பொது நெருக்கடிதான் காரணம் என்றும் முதலாளித்துவ ஆய்வாளர்களே கூறுகின்றனர். அணு உலைகளை அமைப்பதற்கும், மின் பகிர்மான திட்டங்களுக்கும், விபத்துக்காலச் செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்தாலும் அணு உலைகளை இலாபகரமாக இயக்கமுடியவில்லை. பொருளாதார நெருக்கடிகளால் மற்றத் துறைகளைப் போலவே அணுமின் துறையும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல லட்சம் கோடி டாலர்களை அரசாங்கம் இலவசமாக வழங்கினாலும் முதலாளித்துவ வர்க்கங்களால் எந்த ஒரு தொழில் நிறுவனத்தையும் மீட்க முடியவில்லை. எனவே அணு சக்தித்துறை உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளையும் தனியாரிடமிருந்து நஷ்ட ஈடு இன்றிப் பறிமுதல் செய்து சமூக உடைமை ஆக்குவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைகளைக்குத் தீர்வுகாண முடியும். மாறாக அணு உலைகளை மூடுவது தீர்வாகாது. முன்னேறிய நாடுகளில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் பின் தங்கிய நாடுகளில் மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியையும் நிறுவுவதுதான் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கான ஒரே வழியாகும். அதன் மூலம் மட்டுமே படிப்படியாகச் சமூக உடைமையை நோக்கிச் செல்ல முடியும். இருப்பினும் நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சியின் கீழேயே உலகமய தனியார்மயக் கொள்கைகளை ஒழித்து அணு சக்தி உள்ளிட்ட சேவைத் துறைகளை அரசே ஏற்று நடத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அணு உலையை பாதுகாப்பாகவும் மக்களுக்கான நஷ்ட ஈட்டையும் உத்திரவாதப் படுத்தி இயக்க முடியும். அதற்கு மாறாக அணு உலையை மூடு என்று போராடுவது வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பும் அடையாள அரசியலேயாகும். முதலாளித்துவ நெருக்கடிகளை மூடி மறைத்து ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றுவதே ஆகும். குறிப்பாகக் கூடங்குள அணு உலையை மூடு என்ற போராட்டத்தின் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் அடங்கியுள்ளன.

ஆற்றல் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்

 இந்திய நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட ஆற்றல் துறைகள் அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்.  இந்திராகாந்தியின் காலத்தில் இந்தியா தற்காப்பிற்காக அணு குண்டுச் சோதனை நடத்தியபோது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் எரிபொருள் வழங்க மறுத்தன. அதன் பிறகு ராஜீவ்காந்தி  ரசியாவுடன் கூடங்குளம் ஒப்பந்தம் போட்டு எரிபொருளுக்கு உத்திரவாதம் செய்தார். ரஷ்யாவில் மரபுவழி முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அடுத்து பா.ஜ.க அரசாங்கம் அணுகுண்டு சோதனை செய்தபோது அமெரிக்காவும் பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதை எதிர்த்தே வாஜ்பாய் அரசாங்கம் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தைப் புதுப்பித்தது. எனவேதான் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பம் முதலே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து வருகின்றனர். தற்போது உதயகுமார் கும்பல் அதையேதான் கூறுகிறது.அதனடிப்படையிலேயே தற்போது உதயகுமார் கும்பலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வருகிறது.

 அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் அணு சக்தி, எண்ணெய், எரிவாயு உட்பட அனைத்து ஆற்றல் வளங்களின் மீதும் தனது ஏகபோகத்தை நிறுவுவதற்குத் துடிக்கிறது. சர்வதேச அணுக்கழகம் [International Atomic Energy Agency (IAEA)], அணு எரிபொருட்கள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு ((Nuclear Suppliers Group - NSG), அணு ஆயுதப் பரவல் தடைச்சட்டம் (Nuclear Non - Proliferation Treaty) மூலம் அணுசக்தி துறை முழுவதையும் தமது கட்டுப்பட்டில் வைத்துள்ளது. ஐந்து அணு ஆயுத நாடுகள் தவிர்த்து உலகில் எந்த ஒரு நாடும் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல, அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்றும் மிரட்டுகிறது. தமக்கு அடிப்பணியும் நாடுகள் அணு ஆயுதம் செய்தாலும் கண்டுகொள்ளாத அமெரிக்கா, தமக்கு அடிப்பணியாத நாடுகள் அணுமின்சாரம் தயாரிப்பதையும் மறுக்கிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது என்ற பேரில் ஆப்கன், ஈராக்கின் மீது போர்த்தொடுத்து அந்நாடுகளில் பொம்மை ஆட்சியை நிறுவியுள்ளது. தற்போது ஈரான் அணு குண்டு செய்கிறது என்று கூறி அந்நாட்டின் மீது போர்த்தொடுக்க ஆயத்தம் செய்து வருகிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியக் கிழக்கில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது மேலாதிக்கத்திற்காகவே கொடிய ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துகின்றது.

 அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றும் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா ஏற்ற பிறகுதான், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது. அணுசக்தி ஒப்பந்தமும்கூட ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்களை ஆதரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஹைடு சட்ட நிபந்தனக்கு உட்பட்டே போடப்பட்டது. ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுப்பது; இந்தியாவின் தற்காப்புக்கான அணு ஆயுதத் திட்டத்தைச் சிதைப்பது; இந்தியாவின் சுயேச்சையான அணுமின் திட்டத்தை ஒழிப்பது; இந்திய அணு ஆற்றல் சந்தையில் தமக்குப் போட்டியாக விளங்கும் ரசியா மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளை விரட்டுவது என்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.
 ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றபிறகு, 2010ஆம் ஆண்டு அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமையைக் காப்பது, ஊழலை ஒழிப்பது என்ற பேரில் உலகின் எந்த ஒரு நாட்டிலும் அமெரிக்கா தலையிடும் என்றும்; அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தும் என்றும் அது கூறுகிறது. ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து மக்கள் போராடியபோது அந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா “ஆட்சி மாற்றத்தின்” மூலம் தமது பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் துணைநின்றன. அதற்கும் முன்னர் சோவியத் ரசியாவிலிருந்து பிரிந்து வந்த நாடுகளில் பல வண்ணப் புரட்சிகள் எனும் பேரில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி “ஆட்சிமாற்றத்தை” அமெரிக்கா செய்தது.

 இந்தியாவிலும் அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும், உதயகுமார் தலைமையிலான அணு உலைக்கு எதிரான இயக்கங்களும் இன்னும் பலவகையான தொண்டு நிறுவனங்களும் “அமெரிக்காவிடம் நிதியுதவிபெற்று அதன் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றன”. அமெரிக்காவின் தீவிர விசுவாசியான மன்மோகன் கும்பல் அமெரிக்காவின் கோரிக்கையை முழுமையாகச் செயல்படுத்தும் முறையில் அதற்கு நிர்ப்பந்தம் கொடுப்பது தற்போதைய போராட்டங்களின் நோக்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் தாசனான மன்மோகன் கும்பலையும் எதிர்த்து இந்திய மக்கள் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டால் அப்போது “அமெரிக்காவின் நேரடிப் பொம்மை ஆட்சியை நிறுவ இந்தத் தொண்டு நிறுவனங்கள் துணை நிற்கும்”. அதற்காகப் பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவைகள் போராடுகின்றன. அந்த நோக்கத்தை அடைவதற்கு அரசியல் திரட்டலுக்கான போராட்டங்களில் ஒன்றுதான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும்.

பாதுகாப்பு உத்திரவாதத்துடன் அணு உலையைத் திற

 கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவது என்று மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தவுடன் உதயகுமார் கும்பல் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது. அணு உலை ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, மக்களின் மறுவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவது, கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்காகப் போராடப் போவதாக அறிவித்தனர். ஒரு புறம் உண்ணாவிரதப் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்திக்கொண்டே மறுபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அணு உலை பாதுகாப்புக் காரணங்களுக்காக அணு உலையை மூட வேண்டும் என வழக்குத் தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அணு உலையைத் திறக்க வேண்டும் - பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.
 அதன் அடிப்படையில் அரசாங்கம் அணு உலையில் எரிபொருளை நிரப்பத் துவங்கியதுடன், அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பாக நட்ட ஈடு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி பற்றிக் கேள்வி எழுப்பி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்றம் அணு உலையின் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டது. பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசோ இந்திய அணு சக்தி கழகம் முன்வைத்துள்ள 17 பாதுகாப்பு அம்சங்களில் 7ஐ நிறைவேற்றியுள்ளதாவும், மீதியை அணு உலையை இயக்கிக்கொண்டே நடைமுறைப்படுத்துவதாகவும் நீதி மன்றத்தில் கூறியுள்ளது.

 எனவே தற்போதைய பிரச்சினை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் தீர்த்துவிட்டுத்தான் அணு உலையைத் திறக்க வேண்டுமா? அல்லது இருக்கும் நிலையிலிருந்து அணு உலையைத் தொடங்கி நடத்திக்கொண்டே பாதுகாப்பு அம்சங்களை முழுமையாகச் செயல்படுத்துவதா என்பதேயாகும். இன்று தமிழகத்திலும் நாடு முழுமையும் உள்ள மின்சாரப் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டும் கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை கணக்கில் கொண்டும் பார்க்கும் போது அணு உலையைத் தொடங்கி இயக்கிக்கொண்டே மீதியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீர்ப்பது ஒன்றுதான் உகந்த வழியாகும். அவ்வாறு தீர்வு காண்பதற்குத் தடையாக இருப்பது எது? நீதிமன்றத்தில் அணு உலையை எதிர்க்கவில்லை பாதுகாப்புக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டே மக்கள் மன்றத்தில் அணு உலையை மூடவேண்டும் என்று முற்றுகைப் போராட்டம் நடத்திவரும் உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரின் அராஜகமே தடையாக உள்ளது.

 மறுபுறம் மத்திய, மாநில அரசுகளோ ஆரம்பத்திலிருந்தே கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையின்றியே செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி போபால் விஷவாயுப் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் அக்கட்சியின் வாக்குறுதிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாது. கூடங்குளம் மக்கள் பிரச்சினைகளை அடக்குமுறைகள் மூலம் தீர்வுகாணாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

மக்கள் பிரச்சினைகளை பேசித் தீர்

 கூடங்குளத்தில் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் விபத்துக்கள் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்; பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்குதல், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிய நிறுவனத்தை விபத்துக்கான நட்ட ஈட்டை ஏற்கவைப்பது; ரசியாவுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் மட்டுமல்லாது அமெரிக்காவோடு ரகசியாமாகச் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தங்களையும் வெளியிடவேண்டும் எனப் போராடுவது அவசியமாகும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பேசித்தீர்க்க உதயகுமார் குழுவினருடன் மட்டுமல்லாது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். அதைக் கூடங்குள அணு உலையை இயக்கிக் கொண்டே செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவதுதான் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் செய்யவேண்டியதாகும்.

கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து

 உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பாளர்கள் தங்களைக் காந்தியவாதிகளாகவும், தாங்கள் அகிம்சை வழியில் போராடுபவர்களாகவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அணு உலைக்கு எதிராக மறியல் செய்வது, முற்றுகைப் போராட்டம் என்று செயல்படுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கூட நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று அராஜகமாகப் பேசுகின்றனர். அவர்களை பொறுத்தவரை எல்லா விதமான நியாய தர்மங்களையும் மீறி வாய்ப்புக் கிடைக்குமானால் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தகர்த்து தரைமட்டமாக்கவும் தயங்கமாட்டார்கள். உண்மையில் அதுதான் அவர்களின் வேட்கையும் கூட.

 உதயகுமார் கும்பல் அணு உலைக்குச் சேதாரம் விளைவித்தால் அதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்துவார்களா? அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்களா? அல்லது அணு உலையை இடிக்க விட்டுவிட்டு வழக்குப் போட்டுவிட்டோம் என்று நாடகமாடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மன்மோகன் தலைமையிலான மத்திய ஆட்சியும், ஜெயா தலைமையிலான மாநில ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவு ஆட்சிகளேயாகும். உதயகுமார் போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிபெறுகிறார்கள் என்று பிரதமரே கூறியபோதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவ்வாறு அமெரிக்காவிலிருந்து வரும் நிதியை தடுத்து நிறுத்தவும் இல்லை. நரசிம்மராவ் ஆட்சியின் போது அயோத்தியில் பெரும் அளவிலான இராணுவத்தைக் குவித்து வைத்த பிறகும் கூட இந்துமத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்ததை எப்படி வேடிக்கை பார்த்ததோ அதேபோல அமெரிக்காவின் ஆதரவாளர்கள் தற்போது கூடங்குளம் அணு உலையை இடிப்பதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அணு உலையைத் தாக்குபவர்களை முன்கூட்டியே தடுக்கவேண்டும். அவ்வாறு அணு உலையை இடிக்க முயற்சி செய்தால் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் அணிதிரள வேண்டும்.

 தொகுத்துப் பார்க்கும் போது இன்று அணு மின் நிலையங்கள் அமைப்பதில் உள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு அணு உலைகளை மூடுவதன் மூலம் தீர்வுகாண முடியாது. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ஒழித்துக்கட்டி ஒரு சுதேசிய மின் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமே தீர்வு காணமுடியும். அதற்கு அணு உலைக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே தீர்வாகும்.

 அணுசக்தியை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை என்றும், எனவே கூடங்குளம் அணு உலையை மூடு என்றும் ஒரு சிலர் இயக்கம் நடத்துகின்றனர். அதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து நிதியுதவி பெற்று செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அணு உலையை மூடக்கோருவது  ஜனநாயக உரிமை என்றால், அணு உலையைத் திற என்பதும் ஜனநாயக உரிமையே. உண்மையில் அணு உலையைத் திற என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாகும். எனவேதான் கூடங்குளம் அணு உலையைத் திற என்ற கோரிக்கையின் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரளவேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

* கூடங்குளம் அணு உலையைத் திற!

* அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளை, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வுகாண்!

* அணு உலை மீதான தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை எடு!

* தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி வருவதைத் தடைசெய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு அக்டோபர், 2012
================
முழு விரிவான கூடங்குளம் குறுநூலைப் படிக்க இணைப்பில் அழுத்தவும்.  http://samaveli.tripod.com/
=================

Wednesday 19 September 2012

நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் மன்மோகன் ஆட்சியைத் தூக்கி எறிவோம்!

 
சில்லரை வணிகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டிற்கான அனுமதியைத் திரும்பப் பெறு!
 
நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் மன்மோகன் ஆட்சியைத் தூக்கி எறிவோம்!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளை, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வுகாண்!

அணு உலை மீதான தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை எடு!

தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி வருவதைத் தடைசெய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Tuesday 18 September 2012

பிணம் தின்னிக் கழுகு இராஜபட்சேவே, இந்தியாவில் கால்வைக்காதே!


ஈழத் தமிழரின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு புத்தர் வழிபாடா?
 
பிணம் தின்னிக் கழுகு இராஜபட்சேவே, இந்தியாவில் கால்வைக்காதே!

ஈழத் தமிழின அழிப்புக்கான
மன்மோகன் – சோனியா,சுஷ்மா, இராஜபட்சே
கூட்டணியை முறியடிப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Thursday 6 September 2012

பதிப்புரை: அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து- ஸ்ராலின்

 
 
ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து : ஜே.வி.ஸ்டாலின்
 
பதிப்புரை
 
அந்நிய முதலீடுகளின் உதவியின்றி அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடுகள் இன்றி எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாட்டிலும் தொழிற்துறை வளர்ச்சியை உருவாக்கவே முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது.
ஏகாதிபத்தியத்தியவாதிகளும், அவர்களின் தாசர்களான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். தீவிர வலதுசாரி பிரிவினர் முதல், திருத்தல்வாத போலிக்கம்யூனிஸ்டுகள் வரை அந்நிய முதலீடுகளின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டுவருகின்றனர். பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இக்கருத்தையே ஓயாமல் பரப்பி வருகின்றன. ஆனால் சோவியத் யூனியனின் தலைவரும், தலைசிறந்த
மார்க்சியவாதிகளுள் ஒருவருமான தோழர் ஸ்டாலின் சோசலிச ரசியா உள்ளிட்டு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய முதலீடுகளின் உதவியின்றி சுயேட்சையான தொழிற்துறை வளர்ச்சிக்கான ஒரு புதிய மாற்றுப் பாதையை முன்வைத்தார். 1925ஆம் ஆண்டு ஜூன் - 9ல்
ஸ்லெர்ட்லாவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பாதையை முன்வைத்துள்ளார். இந்தப்பாதைதான் இரண்டாம்
உலக யுத்தத்திற்கு முன்பு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளெல்லாம் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டபோது, சோவியத் ரசியாவை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற ஒரு புதிய பாதையாகும்.
 
தொழிற்துறையில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகள் மூலதனத்தை எப்படி சேர்த்தன என்பதை வரலாற்று வழியில் தோழர் ஸ்டாலின் அதில் எடுத்துக் காட்டுகிறார். உலகத்தின் “தொழிற்கூடம்” என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலிருந்து “உபரி மூலதனத்தை” உறிஞ்சுவதன் மூலம் வலிமை மிக்க தொழிற்துறையை கட்டி அமைத்தது. ஜெர்மனி, பிரான்ஸ் மீது போர்தொடுத்து, அந்நாட்டை தோற்கடித்து அதன் மீது
அபராதம் விதித்து பெரும் தொகையை திரட்டியது. அதைக் கொண்டு தனது நாட்டின் தொழிற்துறையில் முதலீடு செய்தது. ஜார் கால ரசியா, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து, அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று கடும் நிபந்தனைகளின் கீழ் மூலதனத்தை பெற்று தொழிற்துறை வளர்ச்சிக்கு திட்டமிட்டது. மேற்கண்ட அனைத்து வழிகளும் பின்னிப்பிணைந்த வழியில்தான் அமெரிக்கா தொழில்வள நாடாக மாறியது என்பதை தோழர்
ஸ்டாலின் விளக்கியுள்ளார். அத்துடன் மேற்கண்ட எந்த ஒரு பாதையும் சோசலிச ரசியாவிற்கு பொருந்தாது, அந்த வழிகளை ஏற்கவும் முடியாது என்று கூறி சுயேட்சையாக உள் நாட்டிலேயே மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கும், அடிமைத்தனமான நிபந்தனைகள் இன்றி அந்நிய
முதலீடுகள் பெற்று தொழிற்துறை வளர்க்கவும் ஒரு புதிய பாதையை இதில் அவர் முன்வைத்துள்ளார்.
 
இன்று அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் அந்நிய மூலதனத்திற்கு தடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஆசிய ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தடையின்றி நுழைவதால் அந்நாடுகளில் தொழிற் வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக தொழிற்துறை சீரழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக அந்நிய முதலீட்டிற்கான கதவை முழுவதுமாக திறந்துவிட்டதால் தொழிற்துறை
உற்பத்தி மைனஸ் 2 சதவீதமாகவும், விவசாயம் கடும் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. அந்நிய முதலீட்டிற்கு கதவை அகலக் திறந்ததால் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி என நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிட்டது. அந்நிய முதலீடுகள்
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை. மாறாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை சீரழிப்பதோடு நாட்டின் இறையாண்மையையும் அழித்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக்கி வருகிறது.
 
அந்நிய முதலீடுகள், தாராளமயக் கொள்கைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட  மூன்றாம் உலக நாடுகளை மட்டும் சீரழிக்கவில்லை. முதலாளித்துவ மையங்களான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்கூட பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. இன்று ஏகாதிபத்திய நிதி மூலதனம் 98 சதவீதம் உற்பத்தியல்லாத ஊக வாணிபத்திலும், பங்கு சந்தை மற்றும் லேவாதேவி
மூலதனமானது செயல்படுகிறது. நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் போக்கு என்ற லெனினின் கூற்றுக்கு சான்றாகவே திகழ்கிறது. வளர்ச்சி என்பதே ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் இனி சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய நிதி
மூலதனம் நாடுகளுக்கிடையிலும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தவண்ணம் உள்ளது. காலனிய நாட்டு மக்களும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் கடுமையாக சூறையாடப்படுவதால் மீள முடியாத மிகு உற்பத்தியின் நெருக்கடியில்
நிதிமூலதனம் சிக்கியுள்ள இந்தப் பொருளாதார முறைகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையை தோழர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை நோக்கிய, மானுடத்தை முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து மீட்கவல்ல, அப்பாதையை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர ஆட்சியை உருவாக்கும் திசையை நோக்கி அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டிய தருணம் இது. அதற்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.
 
சமரன் வெளியீட்டகம்

 சமரன் வெளியீட்டகம் எண்:28/141, மாதவரம் நெடுஞ்சாலை,பெரம்பூர், சென்னை - 600 samaranpublisher@gmail.com

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!


செப்டம்பர்-12, தியாகிகள் தினம்!

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

1980 செப்டம்பர் 12ல், தருமபுரியில் புரட்சித் தோழர் பாலன் படுகொலை செய்யப்பட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகிறோம். 1947 ஆகஸ்ட் போலிச் சுதந்திரத்தை எதிர்த்து உண்மைச் சுதந்திரத்தை வேண்டியும், நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதித் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த தோழர்கள் சாரு, எல்.அப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நக்சல்பாரி தோழர்களின் தியாகத்தை போற்றும் நாளே இந்நாள். அத்துடன் 1947க்கு முன்பும், பின்பும் இந்திய நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் கனவை நனவாக்க சபதம் ஏற்கும் நாளே இந்நாள்.

நாட்டை ஆளும் மன்மோகன் சோனியா கும்பல் அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமைப்படுத்துவதில் நான்கு கால் பாய்ச்சலில் பயணம் செய்கிறது. உலகமயம் மற்றும் தனியார்மயக் கொள்கைகள் மூலம் நாட்டின் விலை மதிக்க முடியாத இயற்கை மற்றும் கனிம வளங்களை பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளி களுக்கு தாரை வார்த்து நாட்டின் கஜானாவுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்களை மடைமாற்றிவிட்டு, லஞ்ச ஊழலில் திளைப்பதில் எட்டுக்கால் பாய்ச்சலில் அதன் உச்சத்தையே எட்டிவிட்டது. இவ்வாறு நாட்டிற்கும், மக்களுக்கும் துரோகம் செய்வதே சோனியா காங்கிரசின் அடிப்படைக் கொள்கையாக ஆகிவிட்டது.

சில்லரை வணிகத்திற்கு சமாதி

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளான மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளும், தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் திறந்துவிட வேண்டும் என மிரட்டுகின்றன. மன்மோகன் கும்பலோ அந்நிய மூலதனத்திற்கு அனைத்துத் துறைகளையும் குறிப்பாக சில்லரை வணிகத்தை உடனே திறப்பதற்கு கருத்தொற்றுமை வேண்டி கண்ணீர் வடிக்கிறது. அண்மை ஆண்டுகளில் இந்தியாவிலும், உலக முழுவதிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உலகமய, தனியார்மயக் கொள்கைகள்தான் காரணம் என்பதை மன்மோகன் கும்பல் ஒத்துக்கொள்கிறது. ஆனால் மான வெட்கமின்றி அதே கொள்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. வால்மார்ட் போன்ற அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளை திறந்துவிடுவதால் இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 20 கோடி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும். அத்துடன் சிறுதொழில்கள், கைத்தொழில்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல லட்சம் பேர் வாழ்வுரிமை இழந்து நடுத்தெருவில் நிற்பர். இவ்வாறு மன்மோகன் கும்பல் அமெரிக்காவிற்கு அடிபணிந்து நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது.

விவசாயிகளின் தற்கொலை பெருகுகிறது

உலகமயக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இந்திய அரசு நிலச்சீர்திருத்தத்தைக் கைவிட்டு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் 1000 ஏக்கர் பெரும்பண்ணைகள் அமைத்து குழும விவசாயத்திற்கு வழிவகுத்ததே அதற்கு காரணம். கோயில், மடங்கள் பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துள்ளதை ஒழிக்கவே இல்லை. இந்திய அரசு செயல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண் கொள்கைகள் மேற்கண்ட பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் குழும விவசாயத்திற்கே சேவை செய்கிறது.

வேளாண் பொருட்களின் இறக்குமதிக்கு இருந்தக் கட்டுப்பாடுகளை ஒழித்து மலிவான விலையில் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவில் வேளாண் பொருட்களை கொட்டிக் குவிக்க அனுமதித்தல்; விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டுதல்; விதைகள், வேளாண் ஆராய்ச்சி, உயிரியல் காப்புரிமை சட்டங்கள்; உரவிலை கட்டுப்பாட்டை அரசு கைவிடுதல் போன்ற புதியகாலனிய வேளாண் கொள்கைகள் வேளாண்மைத் துறைமீது மான்சாண்டோ, கார்கில் போன்ற அமெரிக்க கம்பெனிகளின் ஆதிக்கத்தை திணித்துவருகிறது.

மேலும் மத்திய அரசு நீர்ப்பாசனத்துக்கான திட்டங்களுக்கு நிதியை மிகவும் குறைத்துவிட்டது. நதிநீர் இணைப்பை செயல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணையிட்ட பிறகும் செயல்படுத்த மறுக்கிறது. காவிரியில் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தவும், முல்லை பெரியாறு ஆற்றில் இருமாநில மக்களின் நலன்களிலிருந்து தீர்வுகாண மறுப்பதாலும், தமிழகம் இன்று பாலைவனமாக மாறுகிறது. இந்தியாவே வறட்சி பாதித்த நாடாக மாறியுள்ளது. அத்துடன் புதியகாலனி வேளாண்கொள்கைகள் விவசாயிகளை மரணக் குழியில் தள்ளுகிறது.

இந்திய அரசு பி.டி. விதைகளை (மரபணு மாற்று விதைகள்) பருத்திக்கு அடுத்து கத்தரிக்காய் உள்ளிட்ட 72 பயிர்களுக்கு விரிவுபடுத்துவது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பி.டி. பருத்தி விதையை பயன் படுத்தியதால் உற்பத்தி பெருகியுள்ளது. எனவே அனைத்துப் பயிர்களையும் பி.டி. விதைக்கு மாற்ற வேண்டும் என வாதிடுகிறது. ஆனால் பி.டி. விதையைப் பற்றி ஆய்வு நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு பி.டி. விதையை தடைசெய்ய வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அண்மை ஆண்டுகளில் பருத்தி விளைச்சல் அதிகரித்ததற்குக் காரணம் இரசாயன உரங்களால் பாதிக்காத விளைநிலம், பாசன வசதி, விதை நேர்த்தி செய்யப்பட்ட ஹைபிரிடுகள்தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பி.டி. தொழில்நுட்பம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபிரிடு விதைகளில்தான் புகுதப்பட்டதே ஒழிய சாதாரண விதைகளில் அல்ல. எனவே பி.டி. விதைகளால்தான் உற்பத்தி உயர்வு என்பது மோசடியாகும். மேலும் பி.டி. விதைகள் 200 சதவீதம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அந்த விதைகளைப் பயன்படுத்தினால் இரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 2010ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசு உரங்களுக்கான மானியத்தை வெட்டியதோடு உரங்களின் மீதான விலை நிர்ணயக் கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டது. எனவே உர விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. விதைகள், உரங்கள், டீசல் விலை உயர்வு விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை பன்மடங்கு உயர்த்திவிட்டன. வேளாண் பொருட்கள் மலிவான விலையில் இறக்குமதிக்கு அனுமதித்து விட்டதால் அத்துடன் போட்டிப்போட முடியாமல் இந்திய விவசாயிகள் பெருத்த நட்டமடைகின்றனர். அரசாங்கம் வழங்கும் கடன் சாதாரண நடுத்தர விவசாயிகளுக்கோ, பணக்கார விவசாயிகளுக்கோ கூட கிடைக்கவில்லை. எனவே பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாய கடன் சலுகைகளை அனுபவிக்கின்றன. எனவே கந்துவட்டி கடன் தொல்லையால் கடந்த 15 ஆண்டுகளில் 1 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டனர். தற்கொலைகள் தொடர்கிறது. விளை நிலங்கள் கொலைக்களங்களாக மாறுவதற்கு இந்திய அரசு கடைபிடிக்கும் புதியகாலனிய வேளாண் கொள்கைகளே காரணம் ஆகும்.

தொழிலாளர்கள் மீதான அரசு பயங்கரவாதம்

மத்திய, மாநில அரசுகள் அந்நிய முதலீடுகளை கவர்வது எனும் பேரில் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு வரிச்சலுகைகள், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவைகளை இலவசமாகவும் மானிய விலையிலும் வாரி வழங்குகின்றன. இது போதாதென்று பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளும் கொள்ளை லாபம் அடிப்பதற்கு உழைப்புச் சுரண்டலுக்கும் துணை போகின்றன.

தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேரமாக மாற்றுவது, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த வேலைகள் மூலம் குறைந்த கூலி கொத்தடிமை முறையை உருவாக்குதல், தொழிற்சங்க உரிமை மறுப்பு, கூட்டுப்பேர உரிமை பறிப்பு, தொழிலாளர் நலத்திட்டங்கள் ஒழிப்பு, .எஸ்.., பி.எப் போன்ற நிதிகளையும் திருடிக் கொள்வது என்று தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகின்றன.

இத்தகைய ஒரு சூழலில்தான் மாருதி தொழிற் சாலையில் வன்முறை வெடித்தது. மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அதைப் பயன்படுத்திக்கொண்டு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். 500 நிரந்தரத் தொழிலாளர்கள், மாருதி சுசுகி நிறுவனம், 500 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது. அரியானா மாநில அரசோ மாருதி நிறுவனத்திலேயே ஒரு காவல் நிலையத்தை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே நிர்வாகம் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை கொண்டு கூலிப்படை அமைத்து தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது. இவ்வாறு, பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக தொழிலாளர்கள் மீது அரசுபயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

கனிம வளங்கள் கொள்ளை போகின்றன

மன்மோகன் சோனியா கும்பலின் ஆட்சி அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் கதவுகளை எந்த அளவிற்கு திறந்துவிடுகிறதோ அந்த அளவிற்கு ஊழலில் புதிய வரலாறு படைத்து வருகிறது. அண்மையில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் ரூ. 1.86 லட்சம் கோடியும், டெல்லி விமான நிலையத்திற்கு நிலம் வழங்கியதில் ரூ. 1.63 லட்சம் கோடியும், ரிலையன்ஸ் மின் உற்பத்தி நிலையம் முறைகேடாக நிலக்கரி வழங்கியதில் ரூ. 29 ஆயிரத்து 33 கோடி என அரசாங்க கஜானாவிற்கு மொத்தம் 3.08 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மன்மோகன் கீழ் இயங்கும் நிலக்கரி சுரங்க ஊழல் மட்டுமே அலைக்கற்றை ஊழலையும் மிஞ்சிவிட்டது.

அண்மையில் நடைபெற்ற இந்த மாபெரும் ஊழல்கள் என்பது பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை மலிவான விலையில் கொள்ளையடிப்பதற்கு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இலஞ்சம் கொடுத்து சாதித்துக் கொள்கின்றன என்பதேயாகும். இதனால் ஏற்படும் இழப்பே ஊழல் என்று கூறப்படுகிறது. டாட்டா ஸ்டீல், எஸ்ஸார் பவர், ஜெ.எஸ்.டி.எல் ஹிண்டால்கோ அதானிபவர், வேதாந்தா நிறுவனங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முறைகேடாக நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமம் பெற்றுள்ளன.

எனவே இத்தகைய முதலாளித்துவ ஊழல்களை ஒழிக்க வேண்டுமானால் உலகமய தனியார்மயக் கொள்கைகளை ஒழிப்பதோடு அந்நிய மூலதனத்திற்கு முடிவுகட்ட வேண்டும். தரகுமுதலாளித்துவ நிலப் பிரபுத்துவ நலன்காக்கும் இந்திய அரசை தூக்கியெறிந்து தொழிலாளி வர்க்கத் தலைமையில் விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சோவியத் வடிவிலான மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதுதான் ஒரே வழியாகும். எனினும் உடனடியாக தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்தும் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அமைச்சர் களையும் மட்டுமல்லாது இலஞ்சம் வழங்கும் பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளை கைது செய்து சிறையிலடைப்பதோடு, அவர்களின் உடைமைகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என போராடவேண்டும். அவ்வாறின்றி இலஞ்சம் கொடுப்பவர்களை விட்டுவிட்டு, இலஞ்சம் வாங்குபவர்களை மட்டும் தண்டிக்கும் சட்டத்தால் அன்னா அசாரே கும்பல் முன்வைக்கும் வலிமையான லோக்பால் போன்ற சட்டத்தால் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக அச்சட்டம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு பணியாத அல்லது லஞ்சம் வாங்க மறுக்கின்ற அதிகாரிகளை மிரட்டுவதற்கே பயன்படும்.

ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோகும் இந்தியா

இந்திய அரசின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து, மன்மோகன் சோனியா கும்பல் சிங்கள இனவெறியன் இராஜபட்சேவோடு கூட்டு சேர்ந்து ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு துணைபோகிறது. போர்க்குற்றவாளி ராஜபட்சேவை சர்வதேச அரங்குகளில் காப்பாற்றுவது; வடக்கு கிழக்கை இணைத்து தமிழர் தாயகம் உருவாக்க வேண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறிய இராஜபட்சேவைக் கண்டிக்க மறுப்பது; ஈழப்பகுதியில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க மறுப்பது; சிங்கள இனவெறி அரசுக்கு அரசியல் பொருளாதார உதவிகள் அளிப்பதுடன் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது; விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீட்டிப்பது போன்ற அனைத்து வகையிலும் சிங்கள இனவெறி இராணுவ சர்வாதிகார அரசுக்கு பக்கபலமாக இந்திய அரசு திகழ்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஈழத் தமிழ் அகதிகள் குற்றவாளிகளைப் போல் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முள்வேலி முகாம்களைவிட கொடிய சித்திரவதைக் கூடங்களாக அவைகள் விளங்குகின்றன. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு அரசியல் உரிமைகளை வழங்க மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவதோடு ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோகும் இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதும்; ஈழமக்களின் தனிநாட்டு உரிமைக்கு ஆதரவளிப்பதும் தமிழ் மக்களின் உடனடிக் கடமையாகும்.

இலவசங்களைக் காட்டி மக்களை வாட்டும் “ஜெயா” ஆட்சி

தமிழகத்தை ஆளும் ஜெயா ஆட்சி, எதற்கெடுத்தாலும் கடந்தகால கருணாநிதி ஆட்சியையே குறை கூறுகிறது. ஆனால் கருணாநிதி ஆட்சிக் கடைபிடித்த கொள்கைகளையே தொடர்கிறது. அமெரிக்காவின் புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதிலும், நாட்டுமக்கள் மீது சுமைகளை சுமத்துவதிலும், இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதிலும் கருணாநிதியையும் விஞ்சிவிட்டது. பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலை உயர்வின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்கள் மீது சுமத்தி முதுகெலும்பை உடைத்தது. 30,000 கோடி கிரானைட் கொள்ளையிலும் ஈழத்தமிழர் பிரச்சினையிலும் கடிதம் எழுதுவதிலும், நதிநீர் பிரச்சினைக்கு கடிதம் எழுதுவதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கின்றார்கள்.

இலவசத் திட்டங்களால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் ஜெயலலிதா. கல்வி, மருத்துவம், சுகாதரம் போன்ற அடிப்படைத் தேவைகளை தனியார்மயம் வணிகமயமாக்கி விட்டு ஆடு மாடு கோழிகள் இலவசத்தைக் காட்டி மக்களை ஏமாற்றுகிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கட்டாயக் கல்வி வழங்குவது, தாய்மொழிக் கல்வி, ஒரே பாடத் திட்டம், அருகமைவுப் பள்ளி என்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா அரசு ஏற்கத் தயாரில்லை. நர்சரி, ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளி என்ற கல்வி கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு பெற்றோர்கள் ஆளாகி பரிதவிக்கின்றனர். தனியார் லாபவெறிக்கு பிஞ்சுக் குழந்தைகள் பலியாவது கும்பகோணம் முதல் தாம்பரம் சேலையூர் வரைத் தொடர்கிறது. ஜெயலலிதா ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்த மறுத்தது, தனியார் பள்ளிகளுக்கு சேவை செய்யத்தான். கருணாநிதியும் கூட சமச்சீர்க் கல்வியின் ஒரே பாடத்திட்டம் என்ற அம்சத்தை மட்டும்தான் ஏற்றார். பிற முக்கிய அம்சங்களை ஏற்கவில்லை. தி.மு., .தி.மு.க என்ற இரண்டு கட்சிகளுமே கல்வியில் தனியார்மயமாக்கி மக்களை கொள்ளையடிக்க காரணமான கட்சிகள்தான்.

அரசு மருத்துவமனைகளோ எலியும், பாம்பும் வசிக்கின்ற பாழடைந்த மண்டபங்களாக மாறிவிட்டன. மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி மற்றும் வியாபரத்தில் கடந்த பத்தாண்டுகளில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டன. போலி மருந்துகள், காலாவதியாகிப்போன மருந்துகள், சந்தையில் விற்கப்படுவதாலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் புதிய மருந்துகளை பரிசோதிக்கும் சோதனைக் களமாக இந்தியாவும் தமிழகமும் மாறி வருவதாலும் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரமின்மையால் நகரங்கள் நரகமாக மாறிவிட்டன. நகரை சுத்தம் செய்வதற்குக் கூட பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சாக்கடை சுத்தம் செய்பவர்கள் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் 36 பேர் மரணமடைந்துள்ளனர். மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் கொடுமைகள் தொடருகின்றன. சாக்கடையை சுத்தம் செய்து கொசுவை ஒழிக்கவும் இந்த ஆட்சிக்கு வக்கில்லை. சுத்தமான குடிநீர் மக்களுக்குக் கிடைக்கவில்லை. விளைவு டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட மர்மக் காய்ச்சல்கள் மக்களின் உயிரை பறிக்கின்றன. இவ்வாறு அரசாங்கம் இலவசமாக வழங்கவேண்டியவைகள் அனைத்தையும் தனியார்மயம் வணிகமயமாக்கிவிட்டு சாராயக் கடை நடத்தி அதில்தான் அரசாங்கமே நடக்கிறது. ஆடு, மாடு, கோழி இலவசங்களை நம்பி மத்திய அரசு அறிவித்துள்ள செல்போன் இலவசத்தை நம்பி ஏமாறப் போகிறோமா அல்லது விழித்துக்கொள்ள போகிறோமா என்பதுதான் இன்றைய மையமானப் பிரச்சினை.

எனவே மன்மோகன் கும்பல் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதையும் அந்நிய மூலதனத்தின் வேட்டைக்காடாக மாற்றுவதையும் எதிர்த்து; உலகமயக் கொள்கைகளைச் செயல்படுத்தி மக்களின் வயிற்றில் அடிப்பதை மூடிமறைத்து இலவசங்களை காட்டி ஏமாற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை எதிர்த்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையில் அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் ஒரு மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வதற்கு நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவு நாளில் சபதமேற்போம். அதற்கு கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

  • சில்லரை வணிகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிடுவதை முறியடிப்போம்!
  • விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் குழும விவசாயம், மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் போன்ற புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!
  • பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள், தொழிலாளர் உழைப்பைச் சூறையாடுவதற்குக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • பணிநீக்கம் செய்யப்பட்ட மாருதி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப வேலைக்கு எடு!
  • ஊழலை ஒழிக்க – அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான நவடிக்கை மட்டும் போதாது! நாட்டின் வளங்களை லஞ்சலாவண்யம் மூலமாகச் சூறையாடும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளைக் கைது செய்! உடைமைகளைப் பறிமுதல் செய்!
  • ஈழத்தமிழின அழிப்பைத் தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!
  •  உலகமய, தனியார்மயக் கொள்கைகளைத் தொடரும் ஜெயாவே! ஆடு, மாடு இலவசத்தைக் காட்டி ஏமாற்றாதே! கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை இலவசமாக வழங்கு!
  • புதிய காலனி ஆதிக்கத்தை முறியடிப்போம்!
  • மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
  • மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday 2 September 2012

கூடங்குளம் அணு உலை குறித்த எமது நிலைப்பாடு (சமரன் வெளியீடு)


``----------எனவே நாட்டின் ஆற்றல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அணு மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறை முழுவதையும் அரசே ஏற்று நடத்தவேண்டும். நாட்டை நாசமாக்கிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளைக் கைவிட்டு சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்திட வேண்டும். அதுவே அணுசக்திப் பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக இருக்கமுடியும். ஆற்றல் துறையில் அணுசக்தி உள்ளிட்டு அனல், புனல், சூரிய ஒளி, காற்று இவைகளைக் கொண்ட ஒரு சுயசார்பு மின் திட்டத்தைச் செயல்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அவர்களுக்குச் சேவை செய்யும், நாட்டை புதியகாலனியாக மாற்றிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். மேலும் இத்தகைய சுயசார்பு மின் திட்டத்தை நிலவுகின்ற அரசமைப்புக்குள்ளேயே தீர்க்கவும் முடியாது. எனவே இந்தியாவின் தரகுப்பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களை தூக்கியெறிந்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது ஒன்றுதான் வழியாகும். அது நீண்டகாலத் திட்டமாகும். உற்பத்தி  சக்திகளின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட ஒரு மக்கள் சக்திதான் - ஐக்கிய முன்னணிதான் - இன்றைய அணுசக்தித் துறை நெருக்கடி உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காணும். சுயசார்பு மின் திட்டத்தைச் செயல்படுத்தும்.``
கூடங்குளம் அணு உலை குறித்த எமது நிலைப்பாடு (சமரன் வெளியீடு)
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
=========
முழு விரிவான குறு நூலைப் படிக்க:

படியுங்கள்!                          பரப்புங்கள்!!                பங்களியுங்கள்!!!