Monday 29 December 2014

`தாய் சேய் மரணம்` - வந்தவாசி கழகப் பொதுக்கூட்டப் படங்கள்






`மருத்துவ மனைகளில் தாய் சேய்மரணங்களுக்கு, மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு ,பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே காரணம்`என முழங்கி கழகம் கண்டனப் பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

வந்தவாசியில் 28-12-2014 அன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தோழர்கள் உரையாற்றுவதையும், மக்கள் கலை மன்ற நிகழ்ச்சிகளையும், கலந்துகொண்ட  மக்களையும் மேலே காண்கின்றீர்கள். நன்றி:தகவல் கழகம்



Saturday 13 December 2014

தனியார்மய தாராளமய பாதையே, தாய் சேய் மரணங்களுக்கு காரணம்



மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 13 பச்சிளங்குழந்தைகள் மருத்துவ வசதியின்றி மரணமடைந்தன. அதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் மரணமடைந்தன. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தருமபுரிக்கு இத்தகைய மரணங்கள் புதிதல்ல. இம்மாவட்டத்தில் மாதம் 60 குழந்தைகள் வீதம் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றன.

   பச்சிளங்குழந்தைகள் மட்டுமல்லாது அண்மையில் சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையின்போது, போலி மருந்துகள் பயன்படுத்தபட்டதால் 12 தாய்மார்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவெனில்,

கருத்தடை அறுவை சிகிச்சிசையின் போது தாய்மார்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுதான்.

   ஊழல் குற்றவாளி “ஜெயா”வின் எடுபிடி முதலமைச்சரான பன்னீர்செல்வமோ, தருமபுரி அரசு மருத்துவமனை சிகிச்சையில் எந்தவிதமான குறைபாடும் இல்லை, எடைக் குறைவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட இயற்கையான மரணம்தான் என்று பச்சிளங்குழந்தைகளின் மரணத்தை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் பெண்கள், குழந்தைகள் பராமரிப்பிலும், தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும் தமிழகம் 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையை தமிழக அரசு வெளியிட்டுள்ள மாவட்ட ரீதியான குடும்பக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையே கூறுகிறது. 2007-2008ஆம் ஆண்டுகளில் 81 சதவீதம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்துகள் கொடுக்கப்பட்டது. அது தற்போது 56 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அம்மை நோய்த் தடுப்பு மருந்து 0.1 சதவீதத்திலிருந்து உயர்ந்து 2 சதவீத குழந்தைகளுக்கு கொடுக்கப்படவில்லை. பேறு காலத்திற்கு முந்தைய தாய்மார்களின் பராமரிப்பு 98 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது. தருமபுரி குழந்தைகள் அரசுப் பொது மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் குழந்தைகள் நல மருத்துவரே இல்லை. 72 குழந்தைகளுக்கு 6 செவிலியர்களும், 3 இன்ங்குபேட்டர்களுமே இருந்தன. மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், இன்ங்குபேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் இல்லாததும், தாய்மார்களுக்கு ஊட்டச் சத்தின்மையும்தான் தாய்-சேய் மரணங்களுக்குக் காரணம்.ஆனால் தமிழக முதல்வரும் அதிகாரிகளும் உண்மையை மூடிமறைக்கின்றனர்.

  தாய்-சேய் மரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, இது ஒரு நாடுதழுவிய பிரச்சினையாகும். பச்சிளங் குழந்தைகளின் மரணம் நாடு முழுவதும் சராசரியாக 1000 குழந்தைகளுக்கு 42 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 56 ஆகவும், கேரளத்தில் 10 ஆகவும், தமிழகத்தில் 21 ஆகவும் மரணமடைகின்றன. குழந்தைகள் மரணமடைவதில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டில் 5 வயதுகுட்பட்ட 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 7,79,000 ஆகும். நாடு முழுவதும் அதிகரித்து வரும் இத்தகைய அவல நிலைக்கு காரணம் என்ன?

   அரசு மருத்துவ மனைகளில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சிய போக்குகள்தான் தாய்-சேய் மரணங்களுக்கு காரணம் என்பது உண்மை அல்ல. மாறாக, மத்திய,மாநில அரசுகள் மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் அமல்படுத்திவரும் தனியார்மய, வணிகமய, தாராளமயக் கொள்கைகள்தான் அதிகரித்துவரும் தாய்-சேய் மரணங்களுக்கு உண்மையான காரணங்களாகும்.

   ஏகாதிபத்திய பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள், மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விலக்கிவைத்து விட்டு, ஏழை நாடுகளில் செயல்படுத்தப்படும் பொது சுகாதாரத் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன. பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை–தனியார் பங்கேற்புத் திட்டத்தை (Public Private Partnership) முன்வைக்கின்றன. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக்கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான மருந்துப்பொருட்கள் அபிவிருத்தித் திட்டங்களையும், ஏழை நாடுகளைச் சார்ந்த மக்களை சோதனைச் சாலை எலிகளாகவும், இந்தியாவை மருந்துகளைப் பரிசோதனை செய்யும் களமாகவும் மாற்றுகின்றன. இந்திய அரசு இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து மருத்துவம் சுகாதாரம் போன்ற துறைகளை தனியார்மயம், வணிகமயத்திற்குத் திறந்துவிடுகிறது. மருத்துவத் துறையில் தனியார்மயம், வணிகமயம் ஆகியவை மருத்துவக் கட்டமைப்பை தகர்த்துவருகின்றன.

தனியார்மயமும், வணிகமயமும் - மருத்துவக் கட்டமைப்புத் தகர்வும்

   மத்திய, மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மருத்துவத் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை ஊக்குவிப்பதால் மருத்துவக் கட்டமைப்புத் தகர்கின்றன. மருத்துவமனைப் பணிகளுக்குப் போதுமான பணியாளர்கள் இல்லை. மருத்துவமனை பணிகளுக்கு ஒப்பந்த முறைகள், அயல்பணி ஒப்படைப்பு மூலம் தகுதியில்லாத செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் “ஏக்கம்” (EKAM) என்ற தொண்டுநிறுவனம் அயல்பணி ஒப்படைப்பு முறைகள் ஆகியவற்றின் மூலம் பணிகளைச் செய்து வருகிறது.

    இன்று இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் - 76 சதவீதம் மருத்துவர்கள், 53 சதவீதம் செவிலியர்கள் (நர்சுகள்), 88 சதவீதம் சிறப்பு மருத்துவர்கள், 85 சதவீதம் தொழில்நுட்ப பணியாளர்கள், பரிசோதனைப் பிரிவில் 80 சதவீதம் ஊழியர்கள் - பற்றாக்குறை நிலவுகிறது என திட்டக்கமிஷன் அறிக்கையே கூறுகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதுமில்லை. போதுமான மருத்துவ உபகரணங்களும் இல்லை. அத்துடன் காப்பீட்டுத் திட்டம், கட்டணப் பிரிவுகள் தொடங்குவதன் மூலம் அரசுப் பொதுமருத்துவமனைகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் “முத்துலட்சுமி பேறு காலத் திட்டமும்” சீரழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தனியார்மய, வணிகமயக் கொள்கைகளால் மருத்துவர்களற்று, மருந்துகளற்று சீரழியும் அரசு மருத்துவமனைகள் பச்சிளங்குழந்தைகளின் மரணக்கிடங்குகளாக மாறிவருகின்றன.

தாராளமயக் கொள்கைகளும் - மருத்துவத்துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளையும்

   இந்திய அரசாங்கம் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மருத்துவத் திட்டங்கள் மற்றும் மருந்து உற்பத்தி போன்றத் திட்டங்களை திறந்துவிடுகிறது. எயிட்ஸ் ஒழிப்பு, காச நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு, தாய்-சேய் நலத்திட்டம் போன்ற திட்டங்கள் அமெரிக்காவின் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் தொழிலில் அன்னிய நேரடி முதலீடு 100 சதவீதமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்திய மருந்து நிறுவனங்கள் மீது பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது. மருந்துகளின் காப்புரிமைச் சட்டத்தை திருத்துவதன் மூலமும் மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (NPPA) அதிகாரத்தை வெட்டுவதன் மூலமும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியாவின் மருந்துச் சந்தை மாற்றப்பட்டுவருகிறது. இந்தியாவின் மருந்துச் சந்தையின் விற்றுமுதலோ ஆண்டிற்கு ரூ.92,000 கோடியாகும்.

இந்தியாவில் தங்களது மருந்துகளுக்குக் காப்புரிமைப் பெற்றுள்ள ஜப்பானைச் சார்ந்த ஒட்டுஸ்கா (Otuska), அமெரிக்காவின் பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கியூப் (BMS) மற்றும் ஸ்விஸ் நாட்டின் நோவார்ட்டிஸ் (Novartis) போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களது மருந்துகளை சந்தைக்கு கொண்டுவராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றன. இதனால் புற்றுநோய், எச்.ஐ.வி, மஞ்சள் காமாலை, காச நோய் போன்றவற்றுக்கான மருந்துகளின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன. உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலை ஒரே வருடத்தில் 2000 டாலர்கள் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இவ்வாறு தாராளமயக் கொள்கைகளால் உயிர்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனிகளாக மாறிவிட்டது.

பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்யும் எலிகளாகப் பயன்படுத்துகின்றன. நோயாளிகளுக்குத் தெரியாமலே அவர்களுக்குச் சோதனை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் மேற்கத்திய நாடுகளில் கடும் பக்க விளைவுகளை உண்டாக்குவதால் விற்பனையாகாமல் கிடக்கும் மருந்துகளைப் பெயர்மாற்றம் செய்து கொண்டுவந்து இந்தியச் சந்தையில் விற்கின்றன. இவ்வாறு இந்தியாவில் புற்று நோய்க்கான மருந்தை சோதனை செய்ததில் மட்டும் 6000 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சோதனைகளால் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் மாண்டுவருகின்றனர். மருத்துவத் துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பல இலட்சம் ஏழைஎளிய தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் மரணத்தையே பரிசாக வழங்கிவருகிறது.

தாய்மார்களின் ஊட்டச்சத்தின்மையும் குழந்தைகள் மரணமும்

  கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய தாய்மார்களின் ஊட்டச்சத்தின்மை குறைப்பிரசவங்களுக்கும் குழந்தைகள் மரணத்திற்கும் மற்றொரு காரணமாகும். இந்திய அரசாங்கம் செயல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மாளவும் பட்டினியால் சாகும் நிலைக்கும் தள்ளியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்கும், பட்டினிச் சாவுகளுக்கும் எந்தக் கொள்கைகள் காரணமோ அதே கொள்கைகள்தான் ஏழைத் தாய்மார்களின் ஊட்டச்சத்தின்மைக்கும், குறைப்பிரசவங்களுக்கும் குழந்தைகள் மரணத்திற்கும் காரணமாக உள்ளன. கிராமப்புறங்களில் அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைகளுடன் சமூக ரீதியான சாதிய ஒடுக்குமுறைகளும் தொடர்கின்றன. இந்த சாதிய பாகுபாடுகள் ஒடுக்கப்பட்ட சாதியினரை மருத்துவ சுகாதார துறைகளில் கடுமையாக பாதிக்கிறது.

     மறுபுறம் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏகாதிபத்தியவாதிகள் உலக அளவில் உணவு, தண்ணீர், எரிபொருட்களின் விலைகளைக் கடுமையாக உயர்த்துகின்றனர். அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து ஏழை எளிய தாய்மார்கள் சத்துள்ள உணவு பெறமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டு, ஊட்டச்சத்தின்மைக்கு ஆளாகிவருகின்றனர். அண்மையில் தமிழக அரசு பால்விலையை ரூ.10 உயர்த்தியுள்ளதும், தாய்-சேய் நலன்களுக்கு எதிரானதே. சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை எளிய மக்கள் மீது ஒரு பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்து ஏழைகளையே ஒழித்து வருகிறது. இவ்வாறு சந்தைப் பொருளாதாரம் தாய்-சேய் மரணங்களை அதிகரித்துவருகிறது.

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!

    மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள மோடி கும்பல், புதிய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி அன்னிய மூலதனத்திற்குச் சேவை செய்வதிலும் மக்களின் மீது பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்துவதிலும் காங்கிரஸ் கட்சியையும் விஞ்சி செயல்பட்டுவருகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை பன்னாட்டு உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு மானியங்களாகவும் சலுகைகளாகவும் வாரிவழங்கிவிட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கின்ற கொள்கைகளை மோடி ஆட்சி தொடர்கிறது. இவ்வாண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை வரிவசூலில் எட்டமுடியாத நிலையில் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மீண்டும் வெட்டுகிறது. கல்விக்கான ஒதுக்கீட்டில் ரூ.11,000 கோடியும், பஞ்சாயத்துராஜ், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு ஒதுக்கியதில் 25 சதவீதத்தையும், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியதில் ரூ.7,000 கோடியையும் வெட்டியுள்ளது. மோடி ஆட்சியின் இத்தகைய கொள்கைகள் தாய்-சேய் மரணத்தை அதிகரிக்கவே உதவும். சந்தைச் சக்திகளின் நலன்களுக்காக ஏழை எளிய மக்களைப் பலிகொடுக்கும் துரோகத்தை மோடி கும்பல் செய்துவருகிறது.

   ஜெயலலிதாவின் எடுபிடி பன்னீரின் தமிழக ஆட்சி, மக்கள் நலத்திட்டங்களைப் புறக்கணித்து வருவதே மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைவதற்குக் காரணமாகும்.

தாய்மார்களுக்குப் பேறுகாலத்திற்கு முந்தைய, பிந்தைய பராமரிப்புப் பணிகள் சீரழிந்துவருவதன் காரணமாகவே ஊட்டச்சத்தின்மையும், குறைப்பிரசவமும் நிகழ்கின்றன. தமிழகத்தில் மாறிமாறி வருகின்ற எந்த ஒரு ஆட்சியும் “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள் அமைப்பதில் கவனம் செலுத்தி, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளைப் புறக்கணித்து வருகின்றன. தமிழகத்தில் இயங்கிவரும் 500 அங்கன்வாடி மையங்கள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளின்றி சீரழிவைச் சந்திக்கின்றன. அத்துடன் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை வாங்குவதிலும் மாபெரும் ஊழல் என பத்திரிக்கைகள் கூறுகின்றன.

சாராய விற்பனையின் மூலம் நாட்டுமக்களை ஒட்டச் சுரண்டி, அரசாங்கத்தை நடத்திவருகிற அ.தி.மு.க. அரசு இலவசத் திட்டங்களைக் காட்டித் தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை மறைத்துக்கொள்கிறது. 

மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை மக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்துத் தாய்-சேய் மரணங்களுக்கு சாட்சியாகத் திகழ்கிறது. ‘அம்மா’வின் இலவசத் திட்டங்கள் ஏழைஎளியவர்களின் குழந்தைகளை சுடுகாட்டுக்கு அனுப்பும் திட்டமாக மாறிவிட்டது.

   எனவே நாட்டில் பெருகிவரும் தாய்-சேய் மரணங்களைத் தடுத்து நிறுத்த, மருத்துவம், சுகாதாரம் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திட, தனியார்மய, தாராளமய, வணிகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடவும் குழைந்தைகளைப் பறிகொடுத்துப் பாதிக்கப்பட்டுள்ளக் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

சமூக, பொருளாதார நிலைமைகளில் கீழ்நிலையில் உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளே மரணமடைகின்றன!

தனியார்மய, வணிகமயமாக்கலால்...
                  * மருத்துவக் கட்டமைப்புத் தகர்வு !
                  * ஒப்பந்த, அயல் பணி ஒப்படைப்பு முறையில் மருத்துவர்,        
                       செவிலியர் நியமனம்!
                  * மருத்துவரற்ற, மருந்துகளற்ற மருத்துவ மனைகள்!

தாராளமயக் கொள்கைகளால்
                 * மருந்து உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம்!
                 * உயிர்காக்கும் மருந்துகள் கூட மக்களுக்கு எட்டாக்கனி!

* மக்கள் நல்வாழ்வுக்கு அரசு நிதி ஒதுக்க மறுப்பதே சுகாதாரக் கேட்டிற்கும் மருத்துவ மனை அவலங்களுக்கும் காரணம்!
* குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கு!
* மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் கடமையை அரசு கைவிடுவதை எதிர்ப்போம்!
* மக்களை மாய்க்கும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்      
தமிழ்நாடு                                                                                                             டிசம்பர் 2014

Tuesday 9 December 2014

`தாய்-சேய் மரணம்`- கழகக் கண்டனப் பிரச்சாரக் காட்சிகள்

மருத்துவ சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்குக் காரணம்! 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் 
























 மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!
                                                                                        புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக!!

Friday 5 December 2014

தாய்-சேய் மரணம்: கழகம் கண்டனப் பொதுக்கூட்டம்


கண்டன பொதுக்கூட்டம்

இடம் :தொலை தொடர்பு அலுவலகம் அருகில் 

(BSNL ) தருமபுரி 

நாள் :08-12-2014 திங்கட்கிழமை மாலை :5.00 மணி .

தலைமை :தோழர் மாயக்கண்ணன் ம ஜ இ க தருமபுரி மாவட்ட அமைப்பாளர் .

சிறப்புரை

தோழர் ஞானம் ம ஜ இ க மாநில அமைப்பாளர்.

தோழர் மனோகரன் ம ஜ இ க சென்னை .

பேசுவோர்கள்

தோழர் ஜீவா ம ஜ இ க வேலூர் .
தோழர் சோமு ம ஜ இ க மாவட்ட அமைப்பாளர் சேலம் . 
தோழர் பெரியண்ணன் ம ஜ இ க காமலபுரம் தருமபுரி .
தோழர் பழனி ம ஜ இ க கொண்டம்பட்டி ,தருமபுரி .

நன்றியுரை : தோழர்  மாதையன் தருமபுரி .

மக்கள் கலைமன்ற கலை நிகழ்ச்சி நடைபெறும் .

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் .
(தருமபுரி ,சேலம் ,வேலூர் மாவட்டங்கள்)
=======================================================
தொடர்புக்கு: தோழர் மாயகண்ணன் ம ஜ இ க மாவட்ட அமைப்பாளர் நடுப்பட்டி 

செல் 9787145335, 8098538384.

Thursday 4 December 2014

தாய்-சேய் மரணம்: `தாராளமயமே` காரணம் - கழகம்


மருத்துவ - சுகாதார துறைகளை, அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே, மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!

----------------------------------------------------------------------------------
சமூக பொருளாதார நிலைமைகளில் கீழ்நிலையில் உள்ள ஏழைக் கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளே மரணமடைகின்றன!
---------------------------------------------------------------------------------

தனியார்மய, வணிகமயமாக்கலால்...
                  * மருத்துவ கட்டமைப்பு தகர்வு !
                  * ஒப்பந்த, அயல் பணி ஒப்படைப்பு முறையில்
                   மருத்துவர், செவிலியர் நியமனம்!
                  *  மருத்துவரற்ற, மருந்துகளற்ற மருத்துவ மனைகள்!

தாராளமயக் கொள்கைகளால்
                  * மருந்து உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம்!
                  * உயிர்காக்கும் மருந்துகள் கூட, மக்களுக்கு எட்டாக்கனி!


* மக்கள் நல்வாழ்வுக்கு, அரசு நிதி ஒதுக்க மறுப்பதே சுகாதார கேட்டிற்கும் மருத்துவமனை அவலங்களுக்கும் காரணம்!
 * குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கு!
 * மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் கடமையை அரசு கைவிடுவதை எதிர்ப்போம்!

*மக்களை மாய்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்               தமிழ்நாடு     டிசெம்பர்      2014

Tuesday 30 September 2014

18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை, இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!


சொத்து குவிப்பு வழக்கில்
18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை,இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

* ஜெயா கும்பல் மட்டுமே ஊழல்வாதிகள் அல்ல! அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும், அதிகார வர்க்கமும், அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் ஊழல்வாதிகளே!

* ஊழலின் ஊற்றுக்கண் புதிய காலனிய தாரளமயக் கொள்கைகளே!

* ஊழலை ஒழிக்க, மோடி ஆட்சியின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2014

=====================================================================
படியுங்கள்!                                                                                                      பரப்புங்கள்!!

ஊழலை ஒழிக்க – மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம்!

நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!

======================================================================

Saturday 13 September 2014

தியாகிகள் தின,`அப்பு பாலன் சிலை அணி வகுப்பு`, கழக போராட்டக் காட்சிகள்.


சிவப்பு அஞ்சலிக்கு அழைப்பு விடுத்து, பொதுக்கூட்டத் தடையை எதிர்த்த கழகப் பிரச்சாரப் பகிரங்கச் சுவரொட்டி.



அஞ்சலி ஆர்ப்பாட்டத்தின் முன்னணிப் பதாகை!



தோழர்கள் அப்பு பாலன் முற்றத்தில் செங்கொடியேற்றி செம்மலர் பொழிதல்


சிலைப் பிரசங்கம்

மோடி அரசே,
நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!


மேடைப் பிரச்சாரம்


ஜெயா அரசே!

மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!
==============================================================
பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்

மோடி அரசே,

« நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!

« அநியாய அந்நியக் கடன்களை இரத்து செய்!

« ‘வளர்ச்சி’ என்ற பெயரால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்காதே!

« ‘கசப்பு மருந்து’ என்ற பேரால் மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டாதே!

« இரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!

« விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

« வேளாண்மைத் துறையைக் குழும மயமாக்குவதை எதிர்ப்போம்!

« நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

« விவசாயிகளை தற்கொலைக்கும் பட்டினிச் சாவிற்கும் தள்ளுவதை எதிர்த்துப் போராடுவோம்!

« நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமை கொடுமைகளை ஒழிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக இராஜபட்சே கும்பலுக்கு அடிவருடியாகச் செயல்படுவதை அனுமதியோம்!

« கச்சத் தீவை மீட்போம்! தமிழர் நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

« ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!

« தாய்த் தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

« இந்து மதவாத ஆதிக்கத்திற்கு மக்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து நீக்கு!

ஜெயா அரசே!

« மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!

« பாசிச குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறு!

                             மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு                                                             
செப்டம்பர், 2014

Monday 8 September 2014

கச்சத் தீவை மீட்கும் கழகப் போர்!



முன்னுரை

கச்சத்தீவில் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் கொடூரமாக தாக்கப்படுவது தொடர்கிறது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகும் கூட இத்தகைய தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற 15 நிகழ்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த 319 மீனவர்கள் அவர்களது 62 படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். மோடி கேட்டுக்கொண்டதன் பேரால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் மீனவர்களின் படகுகள் இன்னமும் விடிவிக்கப்படவில்லை. கடந்த இரு தினங்களில் மீண்டும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறிய மோடி கும்பல் இன்று தமிழக மீனவர்களின் முதுகில் குத்துகிறது.

எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல தமிழக மீனவர்களுக்கு எதிராக பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி “நான்தான் கடைசியாக இலங்கை சென்றிருந்தபோது அந்நாட்டு அரசிடம் எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள், மீனவர்களை விட்டுவிடுங்கள் என ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று தந்தி மீடியாவில் பேட்டி கொடுத்து தமிழக மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.

சுப்பிரமணியசாமியின் இந்தப் பேச்சு ஏதோ தனித்த ஒன்றாக பார்க்க முடியாது. இந்துத்துவ பாசிச மோடி ஆட்சியின் இலங்கை சம்பந்தமாக மேற்கொண்டுள்ள கொள்கைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமில்லை, கச்சத்தீவுப் புகுதியில் மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையும் இல்லை, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே கச்சத்தீவுப் பிரச்சினையில் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியின் கொள்கைகளையே சுப்பிரமணியசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
சுப்பிரமணிய சாமி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்துக்கொண்டு இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் செய்துவரும் துரோகங்கள் ஏராளம். பார்ப்பனிய உயர் ஆதிக்க வெறியிலிருந்து செயல்படும் ஒரு ஐந்தாம் படை என்பதையும் நாடறியும். இலங்கை பிரச்சினையில் மோடி ஆட்சியின் ஒரு ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என்பதும் வெளிப்படையானதுதான். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் இந்த ஏகாதிபத்திய எடுபிடி, அரசியல் தரகன் செல்வாக்கு செலுத்தி தமிழர்களுக்கு செய்துவரும் துரோகமோ ஏராளம். இத்தகைய ஒரு ஏகாதிபத்திய எடுபிடியை தமிழக மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக் கட்சிகளையும் தனிமைப் படுத்தி இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராகப் போராடி கச்சத் தீவை மீட்பது ஒன்றுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். அந்த நோக்கத்தில்தான் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்                                                                                செப்டம்பர், 2014

தியாகிகள் தின கழகப் பிரசுரம்




செப்டம்பர் – 12, தியாகிகள் நினைவு நாள்!

தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

மோடி அரசே,
நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!


நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் கடைப்பிடித்து வருகிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மோடியின் தலைமையிலான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க., தேர்தலில் வென்று  அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?

புதிய தாராளக் கொள்கையின் தோல்வியும் காங்கிரசின் வீழ்ச்சியும்

மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்த புதிய தாராளக் கொள்கைகளின் விளைவாக நாடு ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அந்நெருக்கடியின் விளைவாகவே காங்கிரஸ் கட்சி தோற்றது. 90ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்தே நரசிம்மராவ், மன்மோகன் கும்பல் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்தி வந்தது. நாடாளுமன்றவாத ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் புதிய தாராளக் கொள்கைகளைச் செயல்படுத்தின. அந்நிய மூலதனத்திற்கு விதித்திருந்த அரைகுறையான கட்டுப்பாடுகளும், தடைகளும் அகற்றப்பட்டன. அந்நிய மூலதனம் வந்தால் புதிய தொழில்நுட்பம் வரும்; இந்தியாவின் போட்டியிடும் திறன் அதிகரிக்கும்; நாட்டின் ஏற்றுமதி பெருகி அந்நியக் கடன் நெருக்கடி ஒழியும் என்று அதை நியாயப்படுத்தினர். ஆனால் அந்நிய மூலதன வருகை அதிகரிக்க அதிகரிக்க நாட்டின் அந்நியக் கடன் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அந்நிய முதலீடுகளும் வளர்ச்சியின் தன்மையும்

2004ஆம் ஆண்டு மன்மோகன் கும்பலின் தலைமையில் அமைந்த ஐ.மு. கூட்டணி ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக புதிய தாரளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியது. அதுவே கடும் பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்தது. அந்த ஆட்சியின் முதற்காலப் பகுதியில் தற்காலிகமாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற உயர் வளர்ச்சியை எட்டியது. அதற்கு அந்நிய முதலீடுகள் ஏராளமாக குவிந்ததே காரணமாகும். 2008ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு நிறுவனங்களுக்கு மலிவான வட்டிக்கு கடன் வழங்கியது. அவ்வாறு குறைந்த வட்டிக்குக் கடன் பெற்ற அமெரிக்காவின் ஊகமூலதனம் அதிக இலாபங்களைத் தேடி இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கிக் குவிந்தன.

அத்தகைய சூழலில்தான் மன்மோகன் கும்பல் அந்நிய மூலதனத்தைக் கவர்வது எனும் பேரில் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கியது. அத்தகைய சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய நிதி மூலதனம் இரண்டு வழிகளில் வந்தது. ஒன்று, இந்திய நாட்டின் விலை மதிக்க முடியாத மூலப்பொருட்களை (சுரங்கம், காடுகள், நிலம் மற்றும் ஆறுகள்) கைப்பற்றுவதற்கு அந்நியமூலதனம் குவிந்தன. இதன் மூலம் இயற்கை மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றிக்கொண்டன.

இரண்டு, 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நிய மூலதனத்தின் வருகை உற்பத்தித் துறையில் உயர் வளர்ச்சியைத் தூண்டியது. நுகர்வோர் கடன் பெற இதன் மூலம் வழி ஏற்பட்டதால் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வு பல்கிப் பெருகியது. வியத்தகு விஷயம் என்னவெனில் 1947ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்தக்காலம் முழுமையும் இந்த வளர்ச்சியானது தேசிய வருமானத்திலோ அல்லது வேலை வாய்ப்புகள் போன்றவற்றிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சேவைத் துறை (ஐ.டி.) போன்ற துறைகள் ஒரு திரிந்த நிலை (distorted) வளர்ச்சியையே எட்டின.

2003-08ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உற்பத்தியின் உயர்வளர்ச்சியை, உயர் இறக்குமதி வளர்ச்சி என்றும் கூறலாம். ஏற்றுமதியைவிட இறக்குமதி ஏற்றங்கண்டது. வேறு வகையில் சொன்னால் ஏற்றுமதி வளர்ச்சி வீழ்ந்தபோதும் இறக்குமதி அதிகரிப்பானது ஏறுமுகமாகவே தொடர்ந்தது. விளைவு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) இட்டு நிரப்ப பெருமளவில் அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), அந்நிய நிதிநிறுவன முதலீடுகள் (FII), அந்நியக் கடன்கள் தாராளமாகப் பெறப்பட்டன. இது நாட்டின் அந்நியக் கடன் சுமையை மேலும் கூட்டியது. இக்கடனுக்குச் செலுத்தும் வட்டியும் கடுமையாக உயர்ந்தது.

உயர்வளர்ச்சியால் பயனடைந்தவர்கள் யார்?

துரிதமாக வளர்ந்த இந்த உயர் வளர்ச்சியின் பயன்கள் விசாலமானதாக பரந்த அளவில் இல்லை. இது தொலைக்காட்சி, மகிழுந்து, குளிர்சாதனப் பொருட்கள் முதலான விலை உயர்ந்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியை அதாவது புதிதாக உருவாகியிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் உற்பத்தியையே பெருக்கியது. இந்த வளர்ச்சியின் பயனாய் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகள்தான் மிகவும் வளர்ச்சியடைந்தன. கடந்த 20 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் 20,000 புள்ளிகள் என்ற உச்சபட்ச வளர்ச்சியின் விளைவாகப் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு ரூ. 96 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையோ 2004-05லிருந்து 2010-11 காலப் பகுதியில் நாட்டின் ஒட்டுமொத்தமாக 67 சதவீதம் உயர்ந்தது. அந்நிய மூலதனம் ஒருபுறம் ஊகவாணிபத்தை வளர்த்தது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளில் 2400 கலோரி உணவுகளை வாங்கும் சக்தியற்ற மக்களின் தொகை 30 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக அதிகரித்தது. பெரும்பகுதி மக்கள் வறுமை நிலைக்குக்குத் தள்ளப்பட்டனர். நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான்.

பொருளாதார வீழ்ச்சி

அந்நிய மூலதனத்தின் வருகையால் ஏற்பட்ட இந்த உயர்வளர்ச்சி விகிதம் நீடிக்கவில்லை. 2008ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு 9 சதவீதம் என்ற உயர்வளர்ச்சி விகிதம் வெறும் 4.7 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதற்குக் காரணம் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்துக்கிளம்பிய பெரும் பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் பொருளாதாரம் முழுமையும் பாதித்ததுதான். அதன் விளைவாக உலகச் சந்தை சுருங்கியது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு, இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்வுகள், அந்நிய முதலீடுகளின் வருகையில் ஏற்பட்ட சுணக்கம் போன்ற பாதிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்தது. இவ்வாறு நம் நாட்டின் பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்படும் நெருக்கடிகளே காரணங்களாக உள்ளன. இத்தகைய உலக முதலாளித்துவ நெருக்கடிச் சூழ்நிலையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நெருக்கடிக்கும் காரணமாகும். அத்துடன் உள்நாட்டு நிலைமைகளும் சேர்ந்து கொண்டன. இதன் விளைவு இந்தியாவில் உற்பத்தி வீழ்ச்சி, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உயர் பணவீக்க விகிதம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் என நாட்டு மக்கள் மீது நெருக்கடியின் சுமைகள் சுமத்தப்பட்டன. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் இத்தகைய தோல்விதான் காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

வளர்ச்சிக்கான தடைகள்

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்த உயர் வளர்ச்சியின் வீழ்ச்சிக்கு மூன்று முக்கியத் தடைகள் காரணங்களாக உள்ளன.

முதலாவதாக 

தொழிற்துறை வளர்ச்சியின் வெற்றிக்கு வேளாண்துறையில் நிலவும் பிற்போக்கான அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் தடைகளாக அமைகின்றன. வேளாண்துறைதான் இயந்திரத் தொழிற்துறைக்கான மிக முக்கியமான மூலப் பொருட்களான பஞ்சு, சணல், கரும்பு போன்றவைகளையும், தொழிலாளர்கள் நுகருகின்ற உணவு தானியப் பொருட்களையும் வழங்குகின்றன. அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளால் வேளாண்மைத் துறையில் நிலவும் உற்பத்தித் திறன் குறைந்து, இப்பொருட்களின் விலை உயர்வுகள் வளர்ச்சிக்குத் தடையேயாகும். அரைநிலப்பிரபுத்துவ முறைகளான கந்துவட்டி, ஊகவாணிபம் விவசாயிகளைப் பெருமளவில் வறுமையில் ஆழ்த்தியுள்ளன. அது தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையை மிகவும் குறுக்கிவிடுகின்றன. அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அமைப்பு முறை நீடிப்பதற்குச் செழுமையான விளைநிலமாகத் திகழ்கிறது. பிணத்தைச் சுமந்து திரிவது போன்று ஒழித்துக்கட்டப்பட வேண்டிய இந்த பண்பாட்டுச் சுமை, பல ஆற்றல் மிக்க, துடிப்பான சமூக சக்திகள் உருவாகி வளர்ந்து வருவதை தடைசெய்கிறது.

நிலச் சீர்திருத்தத்தை மறுத்து இந்திய அரசு வேளாண்மைத் துறையில் அமல்படுத்திவரும் வேளாண்மைக் குழுமமயம் பன்னாட்டு, உள்நாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் பெருமளவு நிலத்தைக் குவிக்கின்றன. அத்துடன் வேளாண் உற்பத்தி, ஆராய்ச்சி, வணிகம் என அனைத்துத் துறைகளிலும் மான்சாண்டோ, கார்கில் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளின் ஆதிக்கம் திணிக்கப்படுகிறது. அதன் விளைவாக தடைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு வேளாண் விளை பொருட்கள் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவு விலையில் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக இந்திய விவசாயிகள் போட்டி போட முடியாமல் நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர். விவசாயிகள் திவாலாகி தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுகின்றனர். இதுவும் நாட்டின் உயர் வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே உள்ளது.

இரண்டாவதாக, 

புதிய தாராளக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் அந்நியக் கடன் அதிகரித்து வட்டி, அசல் என திருப்பி செலுத்தும் தொகை என்ற வடிவத்தில் நாட்டின் செல்வம் உறிஞ்சப்படுகின்றன. அந்நியக் கடனை அடைப்பதற்காக அந்நிய மூலதனம் தேவை என்றார்கள். ஆனால் அத்தகைய அந்நிய மூலதனம் நாட்டின் கடனை அதிகரித்துவிட்டது. 2009 மார்ச்சில் 22,500 கோடி டாலராக இருந்த அந்நியக் கடன் சுமைகள் 2012 டிசம்பரில் 72,390 கோடி டாலராக மலைபோல் உயர்ந்துள்ளது. மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளால் முதலீட்டிற்கான லாபம், பங்குகளுக்கான டிவிடெண்ட், தொழில் நுட்பத்திற்கான ராயல்டி, உயர் அதிகாரிகளின் சம்பளம் என பல லட்சம் கோடி ரூபாய்கள் நாட்டிலிருந்து உறிஞ்சப்படுகின்றன. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களின் விலைகளை மோசடியாக நிர்ணயிப்பது, வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் 2011ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 4 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய நாட்டின் செல்வம் வெளியேறியுள்ளது. 2002லிருந்து கடந்த 10 ஆண்டுகளில் இந்த வகையில் வெளியேறிய செல்வம் மட்டும் ரூ. 15.7 லட்சம் கோடியாகும். உண்மையில் சட்டவிரோதமாகப் பல லட்சம் கோடிகள் அந்நிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியாவின் வளங்களை உறிஞ்சிக்கொண்டு போகும் புதிய காலனிய பொருளாதார உறவுகள் உயர் வளர்ச்சிக்கான மற்றொரு தடையாகும்.

மூன்றாவதாக,

புதிய தாராளக் கொள்கைகளை இந்திய அரசு அமல்படுத்திய கடந்த இருபது ஆண்டுகளில் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொண்டு மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை தனியார்மயமாக்கி வருகிறது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை ஆளும் வர்க்கங்களுக்கு சலுகைகளாக அளித்துவிட்டு, நாட்டின் கஜானா காலி என்று கூறி அரசின் முதலீடுகள் குறைக்கப்பட்டு இத்துறைகள் தனியார் மயமாக்கப்படுகின்றன. இத்தகைய துறைகளில் நிலவும் போதாக்குறையும் நாட்டின் உயர் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது.

மேலே சொன்ன இந்த மூன்று தடைகளையும் அகற்றாமல் நாட்டின் உயர்வளர்ச்சி சாத்தியமல்ல. இது அனைத்து மக்களுக்கும் பயன்படுகின்ற நீடித்தத் தன்மை கொண்டதாகவும் இருக்காது. மாறாக அந்நிய முதலீடுகளுக்கு நாட்டின் அனைத்துத் துறைகளையும் திறந்துவிடுவதால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுக்கு எதிரான உள்நாட்டுப் போட்டியாளர்களை அகற்றிவிட்டு இந்தியாவின் பெருந்தொழில் நிறுவனங்களை விழுங்கிவிடுகின்றனர். மென்மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களைக் கைப்பற்றுவதும் தொடர்கின்றன. இவ்வாறு இந்தியாவின் சொத்துக்களும், உற்பத்தித் துறைகளும் பெருமளவில் அந்நியர்களின் கைகளுக்கு மாறுவது என்பது அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்துகிறது. இத்தகைய ஒரு அடிமைநிலையில் நாட்டின் வளர்ச்சி என்பது நிலையற்றதும், நாட்டுமக்களுக்கு பயன்படாத கானல் நீராகவுமே இருக்கும்.

புதிய தாராளக் கொள்கைகள் உலகில் எந்த ஒரு நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை என்பதே உலக அனுபவமாகும். எனவே ஏகாதிபத்திய புதிய தாராளக் கொள்கைகள் நாட்டிற்கு நெருக்கடியையே கொண்டுவரும்; வளர்ச்சியை அல்ல.

பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிவருடியாக மோடி கும்பலின் ஆட்சி,
நாடு இன்று சந்தித்துக்கொண்டிருக்கிற நெருக்கடிகளுக்குக் காரணம் புதியதாரளக் கொள்கைகளின் தோல்விதான் என்பதை திட்டமிட்டு மூடிமறைக்கிறது. காங்கிரஸ் கட்சி புதிய தாராளக் கொள்கைகளை உறுதியாகச் செயல்படுத்தாதுதான் அதாவது காங்கிரஸ் ஆட்சியின் ‘கொள்கை முடக்கம்தான்’ (policy paralices) நெருக்கடிக்குக் காரணம் என்று மோசடியான வாதங்களை மோடி கும்பல் முன்வைக்கிறது. இது கடைந்தெடுத்த புதிய காலனிய தாசர்களின், ஏகாதிபத்திய ஆதரவுப் பிற்போக்கு வாதமேயாகும். அந்நிய மூலதனமே வளர்ச்சிக்கு வழி என்று வக்காலத்து வாங்குவதன் மூலம் ஏகாதிபத்திய கரசேவையில் வெறித்தனமாக ஈடுபடுகிறது.

மோடி அரசாங்கம் வீழ்ந்து விட்ட உற்பத்தித்துறையை தூக்கி நிறுத்துவதற்கு கட்டமைப்புத் துறையை (மின்சாரம், சாலைகள், போக்குவரத்து) வளர்க்க வேண்டும் என்றும், அதற்கு வரும் 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்கள் அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டிலிருந்துதான் மோடி கும்பல் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்குத் திறந்துவிடுகிறது.

அந்நிய முதலீட்டை ஆயுள் காப்பீட்டில் 26 சதவீதத்தை 49 சதவீதமாகவும் வங்கித்துறைகள் உள்ளிட்ட நிதித் துறைகளில் திறந்துவிட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறையில் 49 சதவீதத்தை திறந்துவிட்டுள்ளது. அத்துடன் இரயில்வேத் துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்பதுடன் இரயில் கட்டணங்களை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது. திட்டக் கமிஷனையும் கலைத்துவிட்டு திட்டமிடுதலையே ஏகாதிபத்திய தரநிர்ணய நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் தனியார்வசம் ஒப்படைக்கிறது.

வளர்ச்சி என்ற பேரால் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை பட்ஜட் மூலம் வாரிவழங்கிவிட்டு, மறுபுறம் ‘கசப்பு மருந்து’ என்று கூறி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான நிதியையும், மானியங்களையும் வெட்டுகிறது. இரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை சீரழிப்பது என மக்கள் மீது நெருக்கடிகளின் சுமைகளைச் சுமத்துகிறது.

மோடி கும்பல் அமல்படுத்திவரும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவான இத்தகைய புதிய தாராளக் கொள்கைகள் நாட்டில் ஒரு கடும் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்துதான் மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.

அதன் மூலம் மக்களின் எதிர்ப்புகளை நசுக்கத் துடிக்கிறது. சமஸ்கிருத வாரம் கடைப்பிடிப்பது, இந்தியைத் திணிப்பது, ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்’ தினமாகக் கடைப்பிடிப்பது என்ற ஆணைகளின் மூலம் இந்து மதவாதத்தைத் திணிக்கிறது. மோடி கும்பலின் சமஸ்கிருதத் திணிப்பு, இந்தி மொழித் திணிப்பு போன்ற இந்து மத பாசிசக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் அவசியமானதே. ஆனால் இன்று ஆங்கில மொழி ஆதிக்கம்தான் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஒடுக்குகிறது. எனவே ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளையும் திணிப்பதை எதிர்த்தும் தாய்த் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்கப் போராடுவதே முதன்மையானதாகும்.

மேலும், மோடிக் கும்பல் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நாடு முழுவதும் சிறுபான்மை இசுலாமியர்கள் மீது இந்து மதவெறியர்கள் 600 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மோடி கும்பல் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகக் கலவரம் செய்து மக்களை மத ரீதியாக மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் புதிய காலனியத்திற்கு சேவை செய்யத் துடிக்கிறது.

மோடி கும்பல் அயலுறவுக் கொள்கைகளிலும் காங்கிரஸ் கடைப்பிடித்த கொள்கைகளையே கடைப்பிடிக்கிறது.

குறிப்பாக இலங்கைப் பிரச்சினையில் தமது விரிவாதிக்க நலன்களுக்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததை நியாயப்படுத்துகிறது. கச்சத்தீவு இந்தியாவின் பகுதியே அல்ல என்றும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிப்பு உரிமையில்லை எனவும் இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகமிழைக்கிறது. ஈழத் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தையும், இராணுவமயமாக்கத்தையும் எதிர்க்காமல் 13வது சட்டத்திருத்தம் பேசி ஈழத் தமிழர்களின் விடுதலைக்குத் துரோகம் இழைக்கிறது.

மோடி ஆட்சியைப் பின்பற்றும் தமிழக அரசு

அன்னபூரணியாக, அங்காள பரமேஸ்வரியாக இலவசத் திட்டங்கள் மூலம் தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா, அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் தேச விரோதக் கொள்கைகளையே அமல்படுத்துகிறார். மோடியா? லேடியா? என்று அன்று கேட்டவர் இன்று மோடியோடு சேர்ந்துகொண்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தமிழகத்தைத் தாரைவார்க்கிறார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்றதை எதிர்த்து காங்கிரசை விமர்சித்த ஜெயலலிதா இன்று அனைத்துறைகளையும் அந்நியருக்குத் திறந்துவிடும் மோடி கும்பலின் ஆட்சியை ஆதரிக்கிறார். சமஸ்கிருதத்தையும், இந்தியையும் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பரப்புகிறார். மேலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறிக் கலவரங்களைத் தூண்டும் உயர்சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு ஜெயலலிதா அரசாங்கம் ஆதரவளிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான எதிர்ப்புகளைக் கூட இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி ‘சமூக அமைதி’ பேசுகிறது.

இத்தகைய சூழலில் சென்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது. இதன்படி முதன்முறையாகக் குற்றம் இழைப்பவர்களையும், குற்றம் இழைப்பார் என்று காவல்துறையினர் சந்தேகித்தாலும்கூட ஒருவரை விசாரணையின்றிச் சிறையிலடைக்க முடியும். இச்சட்டம் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தையும் பறித்துவிடுகிறது.

புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், சாதி, மத மோதல்களை எதிர்த்தும் மக்கள் நடத்தும் நியாயமான போராட்டங்களை நசுக்கி, அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்வதற்காகவே ஜெயலலிதா இத்தகைய பாசிசச் சட்டத்தை கொண்டுவந்துள்ளார்.

எனவே நாட்டின் அனைத்துத் துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும், இந்துமதவாதப் பிற்போக்குப் பாசிசத்தை கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் ஆட்சிக்கு எதிராகவும், மோடி கும்பலின் மத்திய ஆட்சியை பின்பற்றும் ஜெயலலிதா அரசாங்கத்தை எதிர்த்தும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுக்க இவ்வாண்டு தியாகிகளின் நினைவுநாளில் அறைகூவி அழைக்கிறோம்.

மோடி அரசே,

« நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!

« அநியாய அந்நியக் கடன்களை இரத்து செய்!

« ‘வளர்ச்சி’ என்ற பெயரால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்காதே!

« ‘கசப்பு மருந்து’ என்ற பேரால் மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டாதே!

« இரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!

« விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

« வேளாண்மைத் துறையைக் குழும மயமாக்குவதை எதிர்ப்போம்!

« நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

« விவசாயிகளை தற்கொலைக்கும் பட்டினிச் சாவிற்கும் தள்ளுவதை எதிர்த்துப் போராடுவோம்!

« நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமை கொடுமைகளை ஒழிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக இராஜபட்சே கும்பலுக்கு அடிவருடியாகச் செயல்படுவதை அனுமதியோம்!

« கச்சத் தீவை மீட்போம்! தமிழர் நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

« ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!

« தாய்த் தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

« இந்து மதவாத ஆதிக்கத்திற்கு மக்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து நீக்கு!

ஜெயா அரசே!

« மோடியின் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றாதே!

« பாசிச குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு                                                             செப்டம்பர், 2014

தியாகிகள் தின கழகச் சுவரொட்டி!


செப்டெம்பர் 12 தியாகிகள் நினைவு நாள் !



செப்டெம்பர் 12 தியாகிகள் நினைவு நாள் !
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

மோடி அரசே,

* நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளை கைவிடு!

*அநியாய அந்நியக் கடன்களை இரத்துச் செய்!

* கசப்பு மருந்து என்ற பேரால் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்காதே!

*இரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறு!

*விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

*வேளாண் துறையை குழும மயமாக்குவதை எதிர்ப்போம்!

*நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

* நிலப்பிரபுத்துவ சாதி,தீண்டாமையை ஒழிக்க போராடுவோம்!

* ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக, இராஜபட்சே கும்பலுக்கு அடிவருடியாக செயல்படுவதை அனுமதியோம்!

* கச்சத் தீவை மீட்போம்!, தமிழர் நலனையும் மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

*ஆங்கிலம் இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!

*தாய்த் தமிழை ஆட்சி மொழி, பயிற்று மொழியாக்க போராடுவோம்!

* இந்து மதவாத ஆதிக்கத்திற்கு மக்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து நீக்கு!

ஜெயா அரசே,

*மோடியின் தேசவிரோத, மக்கள்விரோத கொள்கைகளைப் பின்பற்றாதே!

* பாசிச குண்டர் சட்டத்தை திரும்பப் பெறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ,தமிழ்நாடு

செல்:8098538384.                                                                                             செப்டெம்பர் 2014.

Tuesday 19 August 2014

காங்கிரசின் வீழ்ச்சி - விநியோகத்தில் அச்சுப்பதிப்பு

2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிகண்ட படு தோல்விக்கான காரணத்தை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு சமரன் வெளியீடாக வெளிவந்துள்ளது.
புதிய காலனிய தாராளக் கொள்கைகளின் தோல்விகளால் காங்கிரசின் வீழ்ச்சியும்-உலகளாவிய அனுபவங்களும்.
எனத் தலைப்பிடப்பட்ட இந்நூலின் அச்சுப்பிரதியின் விற்பனை விநியோகம் நடைபெற்றுவருகின்றது.விலை (இந்திய) ரூபாய் 60.
தொடர்புக்கு :samaranvelietagam@yahoo.com மற்றும் கழக முகவர்கள்



Thursday 3 July 2014

தர்மபுரி இளவரசன் முதலாண்டு நினைவுக் கூட்டத்துக்கு தடை!

கழகம் கண்டனச் சுவரொட்டிப் போராட்டம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு ஜூலை 2014

Sunday 25 May 2014

போர்க்குற்றவாளி இராஜபட்சே அழைப்பை எதிர்த்து கழகம் முழக்கம்!

ஈழத் தமிழின அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை, மோடி அழைப்பது தமிழ் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் செய்யும் துரோகமே!


Saturday 3 May 2014

மே நாள் 2014 கழகச் சூளுரையும் எழுச்சி ஊர்வலக் காட்சிகளும்.

மே நாள் 2014 கழகச் சூளுரையும் எழுச்சி ஊர்வலக் காட்சிகளும்.



* போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கியுள்ள உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை முறியடிப்போம்!


* அடிமை விலங்கொடிக்க அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவோம்!



*மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப்பாதையில் அணி திரள்வோம்!




அமெரிக்க இந்திய அடிமை இராணுவ ஒப்பந்தம் ஒழிக!


தேசிய இனங்களின்  சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெல்க!



*உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!


                           * மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க!




கழக மே நாள் ( 2014) தோழர் மனோகரன் சிறப்புரை.

Tuesday 29 April 2014

கழக மே நாள் சூளுரை : அடிமை விலங்கொடிக்க அமெரிக்க புதிய காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!

கழக மே நாள் (2014) சூளுரை: 


கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற மக்களே!

உலக முதலாளித்துவ நெருக்கடி, மீளமுடியாமல் மென்மேலும் புதை குழியில் ஆழ்ந்து வருகின்றது. அதே வேளையில் நெருக்கடிகளின் சுமைகள்
முழுவதையும் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சொந்த நட்டு மக்கள் மீதும்
ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மென்மேலும் சுமத்துகின்றனர். தொழிலாளர்கள்
போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக
மாற்றப்பட்டு ஒட்டச்சுரண்டப்படுகின்றனர். இத்தகைய சுரண்டலுக்கும்,
ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி
வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் கடுமையாக போரிட்டு வருகின்ற ஒரு சூழலில்தான் நாம் இந்த மே நாளை எதிர்கொண்டுள்ளோம்.

கொத்தடிமையாக்கப்பட்டு வரும் தொழிலாளி வர்க்கம்!

மே நாள் வரலாறு என்பது எட்டு மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்துடன் இணைந்துள்ளது. ஆனால் இன்று இந்தியாவிலுள்ள மொத்தத் தொழிலாளர்களில் 94 சதவீதம் பேர் அமைப்புசாரா துறைகளில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான சட்டப்பாதுகாப்பும் இல்லை. அவர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாகவும் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச சம்பளம் கூட வழங்கப்படவில்லை.ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
நிரந்தரத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டு, அயல்பணி ஒப்படைப்பும் (Out Sourcing)
காண்டிராக்ட் முறையும் அதிகரித்துக் கொண்டேபோகிறது. பத்தாண்டுகளுக்கு முன்வரை தற்காலிகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதமாக இருந்தது. ஆனால் 2011-க்குப் பிறகு தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மாதத்திற்கு ரூ.6000 சம்பளம் பெறுகிறார். இது
நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் சம்பளத்தில் 5லிருந்து மூன்று மடங்கு வரை
குறைந்ததாகும். அதுமட்டுமல்ல நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்
வைப்பூதியம் (Provident Fund) இவர்களுக்குக் கிடையாது. ஏகாதிபத்திய
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை இந்திய அரசு
செயல்படுத்துவதற்கு முன்பு தொழிலாளர்களின் சம்பள விகிதம் நாட்டின்
ஒட்டுமொத்த உற்பத்தியில் 35 சதவீதமாக இருந்தது. ஆனால் அதற்குப்பின்பு
தற்போது 20 சதவீதமாக குறைந்துவிட்டது. சம்பளம் குறைவது மட்டுமல்லாது
அமைப்பு சார் தொழிலாளர்கள் மத்தியிலும் எட்டுமணி நேர வேலை நாள்
பறிபோய் 12 மணி நேர வேலை நாளாக மாற்றப்பட்டு வருகிறது.
அரசியல் சட்டத்தின்படி தொழிலாளர்கள், சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையை புதிய தாராளக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதால் இப்போது
தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர் முறை எல்லா
இடங்களிலும் திணிக்கப்படுகிறது.

புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் விளைவாக
தொழிலாளர்கள் அமைப்பாக ஒன்று சேரும் சுதந்திரமும், கூட்டுபேர உரிமையும் பறிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுவது என்ற உத்திரவாதத்தின் மீதுதான் பன்னாட்டு முதலாளிகளுக்கும், அரசுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இந்திய அரசு கடைபிடித்துவரும் புதிய தாராளக்கொள்கையின் தொழிலாளர்
விரோத பிரதான அம்சங்கள் 12 மணி நேர வேலை நாள், ஒப்பந்த கூலிமுறை,
குறைந்தகூலி தொழிலாளர்களை நிரந்தரமாக்க மறுத்தல், சங்கமாக சேரும்
உரிமையையும், கூட்டுப்பேர உரிமையையும் மறுத்தல் உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களைக் கொண்டதாகும்.


நாடுதழுவிய தொழிலாளர்களின் போராட்டம்!

இந்திய அரசின் இந்த தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து சென்ற
ஆண்டு தொழிலாளர்கள் வரலாறு காணாத அளவுக்கு நாடு தழுவிய ஒரு வேலை நிறுத்தத்தை செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தில் 120 மில்லியன்
தொழிலாளர்கள் பங்கு கொண்டனர்.

சி.ஐ.டி.யூ, எ.ஐ.டி.யூ.சி ஆகிய இரண்டு திருத்தல்வாதக் கட்சிகளின்
தலைமையிலான தொழிற்சங்கங்களிலிருந்து ஆளும் வர்க்கக் கட்சிகளின்
தலைமையிலான ஐ.என்.டி.யு.சி, மற்றும் பி.எம்.எஸ் தொழிற்சங்கங்கள்
வரையிலான பல்வேறு தொழிற் சங்கங்களின் ஒரு பரந்த தொழிற்சங்க
முன்னணி இந்த வேலை நிறுத்தத்தை நடத்தின.

இத்தகைய முன்னணியின் சாராம்சம் வர்க்க சமரசம்தான். எனினும் இத்தகைய தொழிற்சங்க முன்னணி நடத்தும் வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் உண்மையான அபிலாசைகளை பிரதிபலிப்பனவையாக இருக்கின்றன.

ஆகையால் இத்தகைய வேலை நிறுத்தங்களில் புரட்சிகர ஜனநாயக
இயக்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பங்கு கொள்ளவேண்டும். அதே சமயம், தொழிலாளிவர்க்கம் இப்போராட்டத்தை முன்னுக்கு எடுத்துச் செல்வதற்கான
வழியை எடுத்துரைக்க வேண்டும்.

இன்று இந்திய அரசும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் அமல்படுத்திவரும் புதிய
காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும், அமெரிக்காவின்
மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளையும் முடிவுக்குக்
கொண்டுவராமல் தொழிலாளர்களின் அபிலாசகள் எதார்த்தமானதாக்க
முடியாது. அரசியல் மாற்றம் இல்லாமல் தொழிலாளர்கள் தங்களின் உடனடிக் கோரிக்கைகளை பெறமுடியாது. எனவே, நாம் தொழிலாளர்களின் இத்தகைய
போராட்டங்களில் பங்கு கொள்ளும்போதே ஒரு புரட்சிகரமான அரசியல்
மாற்றத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட வேண்டும்.

இன்று தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள், அதற்கான வேலை
நிறுத்தங்கள், பொருளாதாரப் போராட்டங்கள்தான். உழைக்கும் மக்கள் பொருளாதார கோரிக்கைகள் இன்றி நாட்டின் பொதுவான முன்னேற்றத்தை ப்பற்றி நினைக்க ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.

உழைப்பாளர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும்போது மட்டும்தான், மக்கள் இயக்கத்தினால் ஈர்க்கப்படுவார்கள். தீவிரமான முறையில் இதில் பங்குகொள்வார்கள். ஓர் இயக்கத்தை உயர்ந்ததாகக் கருதுவார்கள்.

வீரத்தையும், சுயதியாகத்தையும் விடாமுயற்சியையும் பற்றுறுதியையும் அந்த மகத்தான  நோக்கத்திற்காக காட்டுவார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலையின்றி, சாதாரணக் காலங்களில் நம்பமுடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும்பொழுது இது வேறுவிதமாக இருக்கமுடியாது.
தன்னுடைய வாழ் நிலையை உயர்த்திக் கொள்ளும் அதே வேளையில்,
தொழிலாளி வர்க்கமானது கருத்து ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்
முன்னேறுகிறது. மேலும் அடிமை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ளும்
தன்னுடைய உயர்ந்த நோக்கங்களைச் சாதிக்கும் திறன் பெற்றதாகவும்
மாறுகிறது.

ஆனால், பொருளாதார போராட்டத்தின் மூலமாக, தொழிற்சங்கப் போராட்டத்தின் மூலமாக தொழிலாளிவர்க்கம் தனது அடிமைத்தளைகளை அறுத்தெறிய முடியாது. தனது அடிமைத்தளைகளை அறுத்தெறிய வேண்டுமானால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான அரசியல் போராட்டம் - அரசியல் அதிகாரத்திற்கானப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே சாதிக்கமுடியும். அத்தகைய அரசியல் போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் தனித்து போராடியே வெற்றியடைய முடியாது. எனவே இந்திய அரசு அமல்படுத்திவரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுவரும் அனைத்து சமுயாதய வர்க்கங்களையும் அணிதிரட்டுவதன் மூலம்தான் அதை சாதிக்கமுடியும்.


நாட்டை ஓட்டாண்டியாக்கும் புதிய காலனிய அரசியல் பொருளாதார கொள்கைகள் 

இந்திய அரசு கடைப்பிடித்துவரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் நிலச்சீர்த்திருத்தத்தை மறுத்து பன்னாட்டு கம்பெனிகளின் கைகளில் நிலக்குவியலுக்கு வழிவகுத்துள்ளது. குழும விவசாயம் என்ற பெயரால் வேளாண்மை துறையில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. விவசாயிகள் நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர்.

அத்துடன் விவசாய விளைபொருட்களுக்கான இறக்குமதிக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டுவிட்டது. வளர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் தங்களது நாடுகளில் விவசாயத்துறைக்கு மிக அதிகமான மானியங்களை வழங்கி, இந்தியா போன்ற நாடுகளில் தங்களது வேளாண் பொருட்களை மலிவான விலைக்கு கொட்டிக்குவிக்கின்றனர். மறுபுறம் இந்திய அரசோ விவசாயிகளுக்கு அளித்து வந்த மானியத்தை வெட்டியதாலும், இடுபொருட்களின் விலை உயர்வாலும், விளைபொருட்களுக்கு ஆதாரவிலையை வெட்டியதாலும் இந்திய விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளோடு போட்டி போடமுடியாமல் நட்டம் அடைகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக 3 லட்சம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை புரிந்து மாண்டுவருகின்றனர்.

விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத உற்பத்திப் பொருட்களின்
இறக்குமதியின் காரணமாக குளிர்பானங்கள் முதல் பொம்மைகள் வரை
அனைத்து பொருட்களும் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியாவதாலும், இடுபொருட்களின் விலை உயர்வு, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மந்தம், மின்வெட்டு, மின்சாரக்கட்டண உயர்வு போன்ற காரணங்களால் சிறுதொழில்கள், குறுந்தொழில்கள், நெசவுத்தொழில்கள் அழிந்து வருகின்றன.

அதன் விளைவாக கோடிக்கணக்கானோர் வேலையிழந்து வாழவழியின்றி வாடி நிற்கின்றனர்.

சில்லறை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட், பிரான்சின் கேரிபோர்,
பிரிட்டனின் டெஸ்கோ போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை அனுமதித்து, அவர்களின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டு வருவதால் இந்தியாவில் சில்லறை வணிகத்தை சார்ந்து வாழுகின்ற 20 கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசாங்கம் நிதி பற்றாக்குறையை தீர்ப்பது என்ற பேரில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக
வழங்கவேண்டிய சேவைத்துறைகளை தனியாரிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி வருகிறது. அதேசமயம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆண்டிற்கு ஐந்து இலட்சம் கோடி ரூபாயை அரசாங்க கஜானாவிலிருந்து அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் நிதி பற்றாக்குறை தீர்ப்பது என்ற பேரால் இந்திய அரசு கோடானு கோடி மக்களின் நல் வாழ்வுத்திட்டங்களுக்கு வேட்டு வைக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு கல்வி வழங்குவதை மறுப்பதோடு மருத்துவ வசதியின்றி  நோயால் சாகும் நிலைமையை உருவாக்கி வருகிறது.

அமெரிக்காவின் புதியகாலனியாக இந்தியா!

இந்திய அரசு அமெரிக்க ஏகாதிபத்துடன் செய்துகொண்டுள்ள இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாகவும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாகவும் மாற்றிவிட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற அணு உலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1,60,000 கோடி மதிப்புள்ள இந்தியச் சந்தையை திறந்துவிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் சுயேச்சையான அணுமின் திட்டங்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. இந்தியா அணுகுண்டு செய்யக்கூடாது என்ற நிபந்தனையை ஏற்றதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் வேளாண்மை, விண்வெளி, நிதித்துறை என அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது.

மேலும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாது அரசியல் துறையிலும் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகளை அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கு சேவை செய்வதற்கு உகந்த வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாரிக்கிறது. அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதித்து அங்கிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி
செய்யக்கூடாது என நிர்ப்பந்தம் செய்கிறது. இந்திய அரசு அதற்கு அடிப்பணிந்து போவதால் இந்தியாவில் எண்ணெய் விலை உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிட்டது.
இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் ஆசியாவில் அமெரிக்காவின்
மேலாதிக்கத்திற்கு சவாலாக திகழும் சீனாவிற்கு எதிராக இந்தியாவை
பயன்படுத்துவது; பயங்கரவாத எதிர்ப்பு; மனித உரிமை மீறல் என்ற பேரில்
தனக்கு அடிபணியாத நாடுகளின்மீது அமெரிக்காவின் இராணுவத்
தலையீட்டிற்கு இந்தியா ஆதரவு தரவேண்டும்; பேரழிவு ஆயுதங்கள் பரவுவதை தடுப்பது என்ற பேரால் சர்வதேச கடல் எல்லையில் மூன்றாவது நாட்டுக்கப்பலை அமெரிக்காவுடன் சேர்ந்து சோதனையிடுவது; ஆசிய- பசிபிக் கடல் எல்லையில் அமெரிகாவின் வர்த்தக மற்றும் போர்க்கப்பல்களுக்கு இந்தியா காவல்காக்கும் பணியை மேற்கொள்வது என்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய ஒப்பந்தம் இந்திய நாட்டின் இறையாண்மையை முழுமையாக பறிப்பதுடன் தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் அருகாமையிலுள்ள நாடுகளுக்கும் பகைமையை உருவாக்கி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு இந்திய அரசு கடந்த  20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்துவரும் புதியதாராளக் கொள்கைகளும், அமெரிக்காவின் புதியகாலனியத்திற்கு சேவைசெய்யும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் நாட்டை நாசமாக்கி வருவதுடன் தொழிலாளர்கள், விவசாயிகள் ( பணக்கார விவசாயிகளின் ஒரு பிரிவு உள்ளிட்டு), தேசிய முதலாளிகள், சிறுவணிகர்கள் உள்ளிட்ட பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றது. மறுபுறம் பன்னாட்டு
கம்பெனிக்கு, உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும்
நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் மென்மேலும் கொழுத்து வளர்கின்றன.

அடிமை விலங்கொடிக்க புதிய ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

தொழிலாளிவர்க்கம் எட்டுமணி நேர வேலை நாளை வென்றெடுக்க, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்கவும்,
தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்த கூலியில் தமது
உழைப்பை சூறையாடுவதை தடுத்து நிறுத்தவும் புதிய தாராளக்
கொள்கைகளையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும்
கொள்கைகளையும் திரும்பப் பெறுவதன் மூலம்மட்டுமே சாதிக்க முடியும்.

இத்தகைய கோரிக்கைகளை நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை
உருவாக்கும்போது மட்டுமே அதை சாதிக்க முடியும்.

அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அடிப்படையிலான
தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், தேசிய முதலாளிகள்
மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட வேண்டும். தொழிலாளர்
வர்க்கத் தலைமையிலான ஒரு மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்து,
புரட்சியின் மூலம் ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதன் மூலம்
மட்டுமே தொழிலாளி வர்க்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
அத்தகைய அரசியல் மாற்றத்திற்கானப் போராட்டம்தான் தொழிலாளி
வர்க்கத்தின் அபிலாசைகளுக்கு தீர்வளிக்கும்.

எனவே தொழிலாளி வர்க்கம் தனது அடிமை விலங்கொடிக்க, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்று சேர்ந்து கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு இம்மேநாளில்  அறைகூவி அழைக்கிறோம்!


* போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கியுள்ள உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை முறியடிப்போம்!

* அடிமை விலங்கொடிக்க அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கு
முடிவுகட்டுவோம்!

*மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப்பாதையில் அணி திரள்வோம்!

*உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

*மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்-           தமிழ்நாடு-              மே 2014