Friday 8 September 2017

அனிதா படுகொலை கழக ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்-பாபநாசம்

கண்டன ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம்

அனிதா ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்


08/09/2017 மாலை 4மணியளவில் தோழர் கார்த்திக்கேயன் ம.ஜ.இ.க தலைமையில் நடைப்பெற்றது. தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சென்னை, தோழர்.மணி ம.ஜ.இ.க சென்னை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

*மோடி கும்பல்
 ஆட்சியினை
 வரிந்துகட்டி ஆதரித்து
 நீட் தேர்வை
 அனுமதித்து
 தமிழகத்திற்கு
 துரோகம் செய்யும்
 மோடி கும்பலின்
 அடிவருடி
 எடப்பாடி கும்பலே
 வெளியேறு,வெளியேறு
ஆட்சியைவிட்டு
 வெளியேறு!

 
 *சமூக நீதியை
 அழிக்கின்ற
 நீட் தேர்வு
 முறைதன்னை
 ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!
 
ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!
 
 
*இந்திய நாட்டுச்
 சிறையினிலே
 ஒடுக்கப்பட்டுக்
 கிடக்கின்ற
 அனைத்து மாநில
 அதிகாரத்தை
 பறிக்கின்ற நீட்
 தேர்வை
 ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!

ஒழித்துக்கட்டப்
 போராடுவோம்!


 *சுகாதாரம், மருத்துவத்துறையை
 கபளீகரம் செய்திடவே
 கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடும்
 நீட் தேர்வு முறைதன்னை
 ஒழித்துக்கட்டப் போராடுவோம்!
ஒழித்துக்கட்டப் போராடுவோம்!
 
 
*சுகாதாரம் மருத்துவத் துறையை
 கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விட
 வழிவகை செய்யும் நீட் தேர்வை
 வடிவமைத்துத் திணிக்கின்ற
 உலக வர்த்தகக் கழகமெனும்
 புதிய காலனி ஆதிக்க
 அமைப்பைவிட்டு வெளியேறு!
இந்திய அரசே வெளியேறு!
உலக வர்த்தக கழகத்தைவிட்டு
 இந்திய அரசே வெளியேறு.
 
கூடி நின்ற மற்றும் சுற்றுப்புறங்களில் சென்ற மக்கள் மத்தியில் ம.ஜ.இ.க தோழர்கள் மேற்கண்ட முழக்கங்களை ஒலிபெருக்கியில்  முழங்கினர்.
 
கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தோழர் ரணதீபன் தலைமையில் பாபநாசத்தில் 04. 09. 2017 அன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நீட் தேர்வைத் திணித்து அனிதாவைப் படுகொலைசெய்த மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடும் கழக ஆர்ப்பாட்டங்களின் ஓரங்கமாக பாபநாசத்தில் தோழர் மணிவண்ணன் ம.ஜ.இ.க சிதம்பர வட்டார அமைப்பாளர். தோழர் குமார் ம.ஜ.இ.க திருச்சி மாவட்ட அமைப்பாளர் .தோழர் தெய்வ சந்திரன் ம.ஜ.இ.க கடலூர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ம.ஜ.இ.க தோழர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
 
அனிதா ஆர்ப்பாட்டம் பாபநாசம்





 
 
 
 
 
தகவல், புகைப்படம் : Com SR

No comments:

Post a Comment