Monday 15 January 2018

சாதிக்கலவர எதிர்ப்பு சென்னை சேம்பாக்க கழக ஆர்ப்பாட்டம்


தமிழக அரசே!
தருமபுரி-நல்லம்பள்ளி சாதிக்கலவரத்தைத் தடுத்து நிறுத்து!









சாதிமறுப்பு காதல்திருமணத் தம்பதிகளுக்குப்பாதுகாப்புக் கொடு!


காதல் திருமணத்தை எதிர்த்து சாதிக்கலவரத்தைத் தூண்டும்
பா.ம.க.,வன்னியசாதிவெறி அமைப்பினர் மீது நடவடிக்கை எடு!


தாழ்த்தப்பட்ட மக்களின் தற்காப்புக்காகப் போராடும் இளைஞர் மீதான நடவடிக்கையைக் கைவிடு!


 சாதிக்கலவரங்களைத் தடுத்து நிறுத்த தாழ்த்தப்பட்ட மக்களும்
அனைத்துச்சாதி உழைக்கும் மக்களும் புரட்சிகர, ஜனநாயக
சக்திகளும் ஒன்றுபடுவோம்!

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கி, கழக ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்னால் காலை 11. 00 மணிக்கு தொடங்கியது.

முதியோர்,பெண்கள் ஆண்கள்,மாணவர்,இளைஞர், சிறுமியர் சிறுவர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் முழங்கினர்.

ஆர்பாட்டத்திற்கு தோழர் ஞானம் (ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர்) தலைமை தாங்கினார். தோழர் மாயக்கண்ணன் (தருமபுரி மாவட்ட அமைப்பாளர்), தோழர் மனோகரன்ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
ஜனவரி 2018

No comments:

Post a Comment