Monday 30 January 2017

மெரினா மாணவர் எழுச்சியை தேசிய விவசாய ஜனநாயக இயக்கமாக முன்னெடுப்போம்!

 
மாணவர் எழுச்சியை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு,ஏகாதிபத்திய எதிர்ப்பு, விவசாய – தேசிய இயக்கமாக முன்னெடுப்போம்.

*மெரினா மாணவர் எழுச்சி ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்த அனைத்து மக்களின் போராட்டத்தின் தொகுப்பேயாகும்!

* ஜல்லிக்கட்டுக்கான மாணவர், இளைஞர் போராட்டம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தின் மூலம் வெற்றிப்பெற்றுள்ளது. அதற்காக தீரமாக
போராடிய மாணவர் , இளைஞர்களை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்!

*அதேசமயம், மாணவர்களின் எழுச்சியை அடக்கும் நோக்கத்துடன் மோடி அரசும், தமிழக அரசும் இறுதி கட்டத்தில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இத்தகைய மக்கள் எழுச்சி இனி ஏற்படக் கூடாது
என்று திட்டமிட்டே காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

* தமிழக சட்டமன்றத்தின் சட்டத்திருத்தத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் ஒரு கட்டம் முடிவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாகத் தடையை நீக்க மறுத்து மத்திய அரசோ,
உச்சநீதிமன்றமோ முடிவு செய்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்!

* ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர் தேசிய பண்பாட்டுக்கான போராட்டம் என்று சொன்னால் போதாது. உண்மையில் தமிழர்களின் பொதுவான பண்பாட்டு இயக்கமாக ஜனநாயகப்படுத்த வேண்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு என மாணவர் எழுச்சியாக தொடர வேண்டும்!

* ஜல்லிக்கட்டு போன்ற நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சாதி ஆதிக்கத்தில் உள்ள பண்பாட்டை ஒரு பொதுப் பண்பாடாக, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய, ஆணாதிக்கத்தை ஒழிக்கக் கூடிய ஜனநாயகப்
பண்பாடாக வளர்க்க போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
 
ஜனவரி                                                                                                                               2017

Sunday 22 January 2017

(ஜனவரி 2017) - தமிழக மாணவர் எழுச்சி வெல்க!

 
மாணவர் எழுச்சி வெல்க!

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்த அனைத்து மக்களின் போராட்டத்தின் தொகுப்பே மாணவர் எழுச்சி!

மாணவர் எழுச்சி ஜல்லிகட்டுக்காக மட்டுமல்ல!

ஜல்லிக்கட்டுக்கான தற்காலிக தடை நீக்கம்

அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது!

மக்களின் அரசியல், ஜனநாயக உரிமைகள் முதல் விவசாயிகளின் தற்கொலை வரையிலான பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்!


 மாணவர் போராட்டத்தில் அரசியல் கூடாது என்னும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களின் கொள்கைகளைக் கைவிடுங்கள்!


 மோடி அரசின் புதிய காலனிய பாசிச பண்பாட்டு கொள்கைகளை முறியடிப்போம்!

 
மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

 மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.

தொடர்புக்கு தோழர் டேவிட் செல்லப்பா _ 93882815231  -  8098538384

Friday 6 January 2017

ஜெயலலிதா மரணம் கழக முழக்கங்கள்


 
ஜெயலலிதா மறைந்தார் !
ஜெயாவின் ``மாஃபியா சசி கும்பலின்`` ஆட்சி தொடர்கிறது!
 
 உச்ச நீதிமன்றமே,
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உடனே வழங்கு!
 
மோடி அரசே ராம் மோகன்ராவ் ரெட்டி,ஓ. பி.எஸ்,
சசி கும்பல் மீது நடவடிக்கை எடு!
 
அ தி மு க அரசை கைப்பாவையாக மாற்றுவதற்கான மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
 
தமிழக அரசே ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு!
 
தகுதியற்ற சசிகலாவை ஆட்சியில் அமர அனுமதியோம்!

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு      
ஜனவரி - 2017

Thursday 5 January 2017

வாழ்வை மாய்க்கும் விவசாயிகளுக்கு வாழப் போராட கழகம் அறைகூவல்!


மோடி ஆட்சியில் , வேளாண்மை நெருக்கடியும், விவசாயிகள் தற்கொலையும் பெருகுகிறது.
 
மோடி அரசின் கார்பப்ரேட் வேளான் கொள்கைகள், மானிய வெட்டு , வேளான் பொருட்களின் விலை வீழ்ச்சி, அரசு கொள் முதல் கைவிடலை எதிர்த்துப் போராடுவோம்!
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுவோம்!
 
விவசாயிகளின் கடன்களை இரத்து செய், வங்கி கடன் வழங்கு , வறட்சி நிவாரணம் வழங்கு!
 
விவசாயிகளே மாண்டது போதும் , மோடி ஆட்சியை வீழ்த்த சூளுரைப்போம்.



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு      
ஜனவரி - 2017